செவ்வாய், 16 ஜூலை, 2024

VISHARAD POORVARDH -மலர்ச்செண்டு - சருகின் சிறப்பினைப் பற்றி வி.துரைசாமி

 VISHARAD POORVARDH


                   மலர்ச்செண்டு 


சருகின் சிறப்பினைப் பற்றி வி.துரைசாமி கூறுவன யாவை ?


முன்னுரை :


           சருகு என்ற  இந்நூலை இயற்றியவர் வி.துரைசாமி . கவியரங்கம் பலவற்றை கண்ட இந்த கவிஞர் கிராம ஊழியன், அமுதசுரபி, சிவாஜி போன்றவற்றை இயற்றியுள்ளார். 

           இவருடைய முதல் 

கவிதை தொகுப்பு "முதல் காதல்" என்பது ஆகும். இங்கே கொடுக்கப்பட்டு உள்ள "சருகு " என்ற கவிதை சாகித்ய அகதமி ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  

அந்த கவிதையில் கூறப்பட்டவைகளை இங்கே காண்போம். 


சருகு :


         உதிர்ந்து விழும் சருகே உன்னை கேட்கிறேன். அதிர்ந்து விரைந்து ஓடாதே. அஞ்சி மறைந்து ஒளியாதே . 


        நேற்று வரை உன்னை ஆதரித்த மரம் இன்று உன்னை காற்றில் பறக்க விட்டதன் காரணம் புரியவில்லை. 

  

         பச்சை பசும் அழகு பத்திரமாய் நின்ற விதம் போய் தவம் புரியும் முனிவர் போல வற்றி விட்டாய்.


         பொன்னுடலம் கண்டதுமே பூரித்து போனயே.. அன்னை மரம் செய்துவிட்ட இந்த தாழ்ந்த செயலை கண்டயோ ?


          மனதின் பூரிப்பை உடலில் வெளிக்காட்டத் துள்ளுகின்ற மானிடத்தை எச்சரிக்கத் 

தோன்றினாயா?


         முற்றிப் பழுத்த முதியோரின் நெற்றியை போல வற்றி சுருண்டி போனாயே .. 


         காய்ந்த சருகே கனல் நாயகன் உன்னை பாய்ந்து தழுவப் பரவசத்தில் மூழ்கிடுவாய் . 


          காலத்தின் விந்தையினைக் காட்டும் சாருகே உன் நெஞ்சின் ஒலத்தை அறியும் உணர்வோர் யாரோ?



முடிவுரை:


      இவ்வாறாக சருகு என்னும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வி. துரைசாமி கூறியுள்ளார்.

லேபிள்கள்: