திங்கள், 22 நவம்பர், 2021

Praveshika-Tamil Pozhil-1-Thirukkural-2.Natpu Aariyadhal --நட்பு ஆராய்தல் --திருக்குறள்

                                        

                        PRAVESHIKA                                          

                    நட்பு ஆராய்தல் 

                       திருக்குறள் 


நட்பாராய்தல் பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுக ?

                     https://todayisagooddayhindi.blogspot.com/2022/04/thirukkural.html

                        பொருட்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு அதிகாரமே

 நட்பாராய்தல் . அதில் அவர் கூறும் கருத்துக்களை இங்கு

 காண்போம் .


விளக்கம் :


                        ஆராயாது நட்புக் கொள்ளுதல் போன்ற 

கேட்டினைத் தருவது வேறு ஒன்றில்லை.


                       ஆராய்ந்து நட்புகொள்ளாதவன 

இறுதியில்  தான் இறப்பதற்குக்காரணமான 

துன்பத்தைத்  தானே உண்டாக்கிக்

 கொள்வான்.


                     ஒருவனுடைய குணம்,குடிப்பிறப்பு 

அவனிடமுள்ள குற்றம்,குறைவற்ற சுற்றம் ஆகிய 

இவற்றை ஆராய்தறிந்த பிறகே அவனோடு 

நட்புக்  கொள்ள வேண்டும்.


                         நல்ல குடியில் பிறந்து தன் மீது 

சொல்லப்படும் பழிக்கு அஞ்சுபவன் உடைய 

நட்பை விலைக் கொடுத்தாவது கொள்ள

 வேண்டும்.
 

                       நாம்  தவறு செய்ய நினைத்தால் நம் மனம் 

நோகும்படி சொல்லியும்,அப்படி தவறு செய்து 

விட்டால் நம்மை  இடித்துரைத்து கண்டித்தும் 

உலகு வழக்குகளை அறிந்து செய்யும் 

ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை  அறிந்து நட்பு 

கொள்ளவேண்டும்.


                      தீமை வந்தால்  அதிலும் ஒரு நன்மை 

உண்டு.அந்த தீமை தான் நண்பர்கள் 

எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் 

கருவி ஆகும்.


                        ஒருவருக்குப்  பேறு  என்பது அறிவிலார் 

நட்பினை கைவிட்டு அவரை   நீங்குவதேயாகும் .

 

                     ஊக்கம் தளரும் தொழிலைச்செய்ய, நாம் 

நினையாதிருக்க வேண்டும்.நமக்குத் துன்பம் 

வருங்கால் நம்மைக் கைவிடுவார் நட்பினை  

நம் கொள்ளாதிருக்க வேண்டும்.



PRAVESHIKA -தமிழ் பொழில்-1 -10.செல்வச் சிறுமியர் களிப்பு 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA%20-%20-1%20-10.%20%20%20.html

                    ஒருவர் கெடுகின்ற காலத்து அவரை விட்டு 

நீங்குவபவரின்  நட்பானது எமன் 

கொல்லுங்காலத்தில் நினைத்தாலும் கூட 

உள்ளத்தை வருந்த கூடிய   வகையில் அமையும்.



                    உலகத்தோடு பொருந்த வாழ்கின்ற 

குற்றமற்ற   பெரியோரின் நட்பினையே நாம் 

பெற வேண்டும்.அவ்வாறு உலகத்தோடு 

பொருந்தா ட்பினை அவர் வேண்டும் ஒன்றைக்

 கொடுத்தாவது அந்த நட்பினை விட்டு விட 

வேண்டும்.


                        இவையே  திருவள்ளுவரின் 

நட்பாராய்தல் என்ற அதிகாரத்தில் 

கூறப்பட்டுள்ள கருத்துக்களாகும்.




 PRAVESHIKA-TAMIL POZHIL-திருக்குறள்- நட்பு

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/blog-post_18.html


PRAVESHIKA --தமிழ் பொழில்-2 --10.ஆதிரை

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikaaadhirai.html








லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு