Visharad poorvardh-இலக்கிய கனிகள்-1. திருமந்திரம்
Dakshin Bharat Hindi prachar Sabha
visharad poorvardh
இலக்கிய கனிகள்
திருமந்திரம்
திருமூலரின் திருமந்திரம் கூறும் உண்மைகளைத் தொகுத்து எழுதுக?
முன்னுரை:
திருமூலநாயனார் பாடியருளிய திருமந்திரம் பத்தாம்
திருமுறையாகும்.இது சைவ சித்தாந்தத்தின் முதல் நூல் என்று
கருதப்படுகின்றன.திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்
முதலானவர்கள் சைவத்தினை பரப்புவதற்கு அடிப்படையாய்
அமைந்தது திருமந்திரமாகும்.
இச்சிவயோகியார்:
சிவயோகம்:
முனிவரைக் கண்டு அளவளாவ விரும்பி பொதியமலை நோக்கி
புறப்பட்டார். வழியில் காசி திருப்பருப்பதம், திருக்காளத்தி ,
திருவாலங்காடு முதலான பதிகளை தரிசித்துத்
சாத்தனுர் என்னும் ஊருக்கு அருகே பசுக்கள் சில
உயிரற்ற ஒரு மனித உடலை சூழ்ந்து நின்று கண்ணீர் வடிப்பதைகண்டார். அவற்றை மேய்த்துவரும் மூலன் என்பவன் பாம்பு கடி
நீக்குவதற்காக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்து தமது
உயிரை மூலன் உடலில் புகுத்தினார்.மூலன் உயிர் பெற்று
எழுந்தது கண்டு மகிழ்ந்த பசுக்கள் அவரை மோந்து கனைத்தன.
பிறகு மகிழ்ச்சிப் பெருக்கோடு பசுக்கள் தாமே ஊரை நோக்கிச்
சென்றன.
மாலைப்பொழுதுயாகியும் தனது கணவன் மூலன் வீடு
திரும்பாததால் கவலையுற்ற மூலனின் மனைவி தெருவில் நின்று
கொண்டிருந்த திருமூலரை தனது கணவன் என கருதி அழைக்க
எனக்கு உன்னுடன் தொடர்பு ஒன்றும் இல்லை என்று கூறி ஊர்
பொது மடத்தினுள் புகுந்தார். சிவயோகத்தில் அமர்ந்திருந்த
திருமூலர் தமது உடலை சென்று தேட அது காணப்பெறவில்லை.
சிவபெருமான் ஆகமங்களின் உண்மையின் பொருளை
தமிழில் அருளிச் செய்ய வேண்டியே தம் உடலை மறையச்
செய்தார் என்னும் உண்மையை உணர்ந்த திருமூலர்
திருவாவடுதுறையை அடைந்து ஒரு அரசமரத்தின் கீழ்
சிவயோகத்தில் இருந்து ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம்
பாடல்களை உலகம் உய்ய பாடினார்.
திருமந்திரம் :
திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை கொண்ட நூலாகும் .
சாத்திர நூலாகவும் தோத்திர நூலாகவும் விளங்கும் திருமந்திரம்
அற நூல் ஆகவும் இருத்தலை நூலினை நன்கு பயில்வோர்
உணர்வர்.
VISHARAD POORVARDH -இலக்கிய கனிகள் -2.தம்பியர்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHILLAKIYAKANIGALTHAMBIYAR.html
திருமந்திரமும் திருக்குறளும்:
திருக்குறள் :
" காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள"
இந்தக் குறளில் காக்கை தனக்கு கிடைத்த உணவை தான்
மட்டும் உண்ணாது தன் இனத்தையும் கூவி அழைத்து
உண்ணும் இயல்பு உடையது காக்கை.
இப்பேறு உடையோர்க்கு ஆக்கம் மேன்மேலும் பெருகும்.
என்னும் கருத்து திருக்குறளில் நன்கு விளக்கப்படுகின்றது.
இதே கருத்தை திருமூலரும் திருமந்திரத்தில் இவ்வாறு
எடுத்துரைக்கிறார்.
"காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே "
என்னும் தொடரில் நாளும் உண்பதையே உண்டும் ,
உணவில் ஆசை நீங்காது கிடக்கும் மக்களை குறிப்பதே
உணரலாம்.
வறுமையைப் பற்றி திருக்குறளில்
" இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது"
கொடிதினும் கொடிது வறுமை கொடிது அதை விடக்
கொடியது வேறொன்றும் இல்லை.
நெருப்பினில் கிடந்து துயிலுவது என்பது எளிது.ஆனால்
வறுமையில் வாடுவோன் துயிலுவது என்பது ஒரு நாளும்
இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே.
கொடையும்,கொண்டாட்டமும் நடைப்பிணமாக நாட்டில்
இயங்கும் வறியவனுக்கு இல்லை. இவ்வாறு திருமந்திரத்தில்
வறுமையின் வாழ்வு குறித்து எடுத்துக் காட்டப்படுகிறது.
நமது வாழ்க்கை பிறப்பு,இறப்பு என்னும் இரண்டு
எல்லைக்கு உட்பட்டது. நமது இளமை காலம் என்பது நீர்க்குமிழி
போன்றது. எப்போது எமன் வருவான் என்று சொல்லுதல்
முடியாது ஆகவே வாழும் சில நாட்களில் மனிதப் பண்பு கெடாது
இருத்தல் சிறந்தது ஆகும்.
திருமந்திரம் :
"இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே"
ஒருவன் தனது இல்லத்தில் உணவு உண்டு விட்டு சிறிது
நேரம் தனது மனைவியுடன் பேசி இருந்து விட்டு இடப்பக்கம்
சிறிது வலி இருப்பதாக கூறி படுத்தார் அவருக்கு அது
நெடுந்தூக்கமாக அமைந்துவிட்டது. நேற்று இருந்த ஒருவன்
இன்று இல்லை.இவ்வாறாக நிலையாமையை குறித்து
திருக்குறளிலும் திருமந்திரத்திலும் ஒத்த கருத்துக்கள்
கூறப்பட்டுள்ளது.
ஆசை:
" செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
அல்கா நல்குரவு அவாவெனப்படுமே.
வறுமை என்பது பொருள் இல்லாமை மட்டும் அல்ல. நீங்காத
ஆசை கொண்டுள்ளவர்களுக்கும் துன்பம் என்றுமே நீங்காது.
ஆசை இல்லாதவருக்கும் என்றும் துன்பம் இல்லையாம் என்பது
குமரகுருபரர் வாக்கு.
திருமந்திரம்:
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஆசை விடவிட ஆனந்தமே "
என்ற வரிகளில் ஆசையை அழிப்பதால் பேரின்பமும்
ஆசையே வளர்ப்பதால் பெருந்துன்பம் உண்டாகும் ஆசையே
துன்பத்திற்கு காரணம். ஆசையை விட்டொழிப்பதால்
பேரானந்தம் உண்டாகும் என்று திருமூலர் கூறுகின்றார்.
உடம்பு:
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்கின்றார்
திருமூலர்
ஏனென்றால் உடலாகிய கோயிலில் இறைவன் எழுந்தருளி
உள்ளான். ஆகவே அகமும் புறமும் தூய்மையாக்கி உடலை
வளர்க்குமாறு கூறுகின்றார்.
உண்மையை உரைக்கும் திருமந்திரம்:
விறகினில் நெருப்பும்,
பாலினில் நெய்யும் ,
மலரினில் மணமும்
இருத்தலை அனைவரும் அறிவர்.
ஆனாலும் அவை கண்ணுக்குத் தெரிவதில்லை.
சீவனில் சிவம் கலந்திருப்பதும் இது போன்ற கண்ணுக்குத்
தெரியாத உண்மையாகும்.
இதை
"பூவினில் கந்தம பொருந்திய வாறு போல
சிவனும் குள்ளே சிவமணம் பூத்தது"
என்னும் வரிகளில் விளக்குகிறார்.
ஐம்பொறிகளை அடக்கி ஆள்வதால் ஒருவன்
பேரின்பத்தை அடையலாம் எனும் உண்மையை
"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு"
என்ற பாடல் வரிகளில் எடுத்துரைக்கிறார்.
முடிவுரை
இந்த அரிய திருமந்திரத்தை அவ்வையார் பிராட்டி
"திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்"
என்று கூறுவதை நம்மால் காண முடிகிறது.
இவ்வாறாக பல அரிய உண்மைகளையும்,
தத்துவங்களையும், உவமைகளையும், கருத்துக்களையும்
திருமந்திரத்தில் நம்மால் காண முடிகிறது.
லேபிள்கள்: Visharad poorvardh-Ilakkiya kanigal


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு