திங்கள், 28 நவம்பர், 2022

VISHARAD POORVARDH -மலர்ச்செண்டு -சீதை அனுமனது சந்திப்பு

VISHARAD POORVARDH


 மலர்ச்செண்டு 

காப்பிய கவிமலர் 

கம்பராமாயணம் 





சீதை மற்றும் அனுமனது சந்திப்பு குறித்து தொகுத்து எழுதுக:


முன்னுரை:


             கம்பராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது. இந்நூல் பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிடகிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும்  ஆறு பெரும் காண்டங்களை கொண்டுள்ளது. 

           இங்கு நாம் காண போகும் பகுதி சுந்தர காண்டத்தில் ஆறாவது பகுதி ஆன சூளாமணிப் படலாமாகும்.  இங்கு நாம் சீதையின் துயர் போக்க எண்ணிய அனுமனது எண்ணம், சீதா தேவியின் கற்பு மேம்பாடு, போன்றவற்றை காணலாம். 


அனுமனது விண்ணப்பம்:


                இராவணன் கவர்ந்து சென்ற இடத்தில் சீதை மிகவும் துயர் கொண்டாள். அந்த சமயத்தில் அங்கு சென்றான் அனுமன். அங்கு சீதையிடம்   தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு  உங்களை மீட்ட  பிறகு இராவணனை கொள்வது சிறந்தது ஆகாது. நீங்கள் இங்கே படும் துயரை நான் எவ்வாறு இராமபிரனிடம் சொல்ல முடியும்?  நீங்கள் என தோள் மீது அமர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை இப்போதே இராமபிரனிடம் உங்களை கொண்டு சேர்க்கிறேன் என்று கூறினான். 
  

சீதையின் மறுப்புரை:


          அனுமனது விண்ணப்பத்தை கேட்ட சீதை நீ கூறுவது உன்னுடைய வீரத்திற்கு உகந்தது அல்ல.  நீ ஐம்புலங்களை  அடக்கியவன் என்றாலும், ஆடவன், உன் தோள் மீது அமர்வது என் பெண்மைக்கு இழுக்கு" என்றாள்.  

    இலங்கை  அரக்கியரின் இவ்விடம் எலும்பு மலையாக மாறவிட்டால் என்னுடய பெருமையை எவ்வாறு உணர்த்துவேன். என் சொல்லால் இந்த உலகையே எரித்து விடமுடியும். ஆனால் அவ்வாறு செய்தால் அது இராமனுக்கு இழுக்காகும்.  இராமனின் திருமேனியை மட்டுமே தீண்டும் நான் வேறு ஒருவரை தீண்ட மாட்டேன் என்று அனுமனிடம் உரைத்தாள். 


சீதையை புகழ்ந்து கூறுதல்:


 
                 சீதையின் வார்த்தைகளின் மூலம் அவளுடைய கருத்துக்களை முழுமையாக உணர்ந்து கொண்டான் அனுமன். வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் பேராண்மை அவளிடம் காணப்பட்டது. இராவணனுடய கொடுஞ்செயலுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. பிறகு பிரிவு துயரால்  வாடும் இராமனுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை கனிந்த மொழிகளால் அனுமனிடம் சொல்லி அனுப்பினாள். 

VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்   5.மதுரை மாநகர் 
https://todayisagooddayhindi.blogspot.com/2022/10/MADHURAI%20MANAGAR%20.html

இராமனுக்கு சீதையின் செய்தி :

  
       என்னை கரம் பிடித்த நாளில் "இப்பிறவியில் நான் இரண்டு பெண்களை மணக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார். "அவரோடு இருந்து அரசு ஆளவும், உடன் வீற்றிருக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை.  இருப்பினும் அடுத்த பிறவியிலும்  நான் அவரது மனைவியாக வரம் அளிக்க வேண்டும்.
 நான் இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிருடன் இருப்பேன் அதற்குள் அவர் என்னை மீட்க வேண்டும் என இராமனிடம் கூறுமாறு சீதை கூறினாள்.

சீதையை அனுமன் தேற்றுதல்:


    
            மரணத்தை பற்றி சிந்திக்க இது நேரம் இல்லை. ஊண் உறக்கம் இல்லாமல் தவிக்கும் இராமபிரனுக்கு நீங்கள் இருக்கும் இடம் அறியாத குறை தவிர படை எடுக்க தடை ஏதும் இல்லை என்று ஆறுதல் கூறினான். சீதை என்னும் நெருப்பின் மேல் இராமனது  அன்பு என்னும் பெரும் காற்று வீசுவதால் இந்த இலங்கை நகரமே பொன்னை போல உருகப் போகிறது என்றான். நான் இராமனை கண்டவுடனே, இராமனும், சுக்கீரவனும் வருவதற்கு முன்பே குரங்குகள் இங்கு வந்து ஆர்ப்பரிக்கும். வானரப்படைகள் இங்கு வந்து தங்கும் எனவும் அனுமன் கூறினான். 

சீதை சூளாமணி அளித்தல்:


   சீதை அனுமனிடம் தன் தலையில் சூடியிருந்த சூடாமணியை எஎடுத்து அவனிடம் தந்தாள். 
" இது எங்கள் மணநாளை நினைவுபடுத்தும் அடையாளம் " என்றாள். அது சீதையின் ஆடையில் முடித்து வைக்கப்பட்டிருந்தது.  இறுதியில் அனுமன் சீதையை மூன்று முறை வலம் வந்து அவளின் ஆசியை பெற்று அங்கிருந்து புறப்பட்டான். 



 
      















லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு