வெள்ளி, 26 நவம்பர், 2021

visharad poorvardh-மலர்ச்செண்டு-பாரத சமுதாயம்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA


VISHARD POORVARDH


                                          மலர்ச்செண்டு

 இக்காலக்கவிமலர்கள் 

                             பாரத சமுதாயம் 

 

பாரதியார் பாடிய பாரத சமுதாயம் பாடலின் கருத்துக்களை தொகுத்து எழுதுக ?


முன்னுரை :


பாரதியார்:


              பாரதியார் எட்டியபுரத்தில் 1882 சின்னச்சாமி லக்குமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். தன்னுடைய பட்டுத்திறத்தாலே நாட்டுணர்வைத் துண்டித் தமிழ்த்தாயைத்
தலைநிமிர வைத்த மஹாகவிஞன். தாய் நாட்டுணர்வையும் தமிழுணர்வையும் தரமுடன் தந்து விடுதலைக்குரல் எழுப்பிய
 வித்தகன் அவர் கவிதைகளில் "சுவை புதிது! பொருள் புதிது !

வளம் புதிது !"

                 

   தேசியம், விடுதலை உணர்வு, தாய்மொழிப்பற்று, வரலாறு,


 வீரம்,வேதனை,தொலைநோக்கு ஆகிய அனைத்தும் அவன்

 கவிதைக்கடலில் அங்கங்கே தனித்தனி நீரோட்டங்களை ஓடும்.


பாரதியாரின் படைப்புகள் :


     கண்ணன் பாட்டு,குயில் பாட்டு ,பாஞ்சாலி சபதம் போன்ற பல படைப்பை படைத்துள்ளார். பாரதியாரின் கட்டுரைகளும்,
 கவிதைகளும் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும்.


பாரத சமுதாயம் :


VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு - தென்றல் 
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/VISHARADPOORVARDHMALARCHENDUTHENDRAL.html

விளக்கம் :


  •   வேற்றுமை ஒற்றுமை கருதாத முப்பது கோடி
  ஜனங்களின் முழுமைக்கும் பொது உடைமை  கொண்ட ஒப்பில்லாத பாரதம் மறுமலர்ச்சி பெற்ற புதுமையை உலகுக்கு வழங்கும் பாரத சமுதாயம் வாழ்க .


  •       மனித உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் உண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்கை இனியுண்டோ அழகிய சோலைகள் நீண்ட நெடிய பசுமையான வயல்கள் கொண்ட                                                   நாடு                                      கனி,கிழங்குகள் தானியங்கள் கணக்கின்றி விளையும் 

நாடு.. கணக்கின்றி விளையும் நாடு.. நித்தம் நித்தம் கணக்கின்றி

 தரும் நாடு.


  •          இனியொரு விதி செய்வோம் .அதை நாளும் காப்போம் .

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் உலகத்தினை

 அழித்திடுவோம்.


  •           எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்கிறான்

 கண்ணபெருமான்.


  •            எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஒன்றென கருதும் நம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே பாரத சமுதாயம் வாழ்க வாழ்க என பாடுகிறார் .


முடிவுரை :


இந்த பாரத சமுதாயம் பாடலில் பாரதியார் நம் பாரத சமுதாயத்தின் சமத்துவதையும் ,பாரதத்தின் பெருமைகளையும் பாடியுள்ளார்.





             







லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு