PRAVESHIKA---தமிழ் பொழில்-1---8.முரசு
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
PRAVESHIKAதமிழ் பொழில்-1
8.முரசு சுப்பிரமணிய பாரதியார்
பாரதியார் முரசு கொட்டி தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:
முன்னுரை:
பாரதியார் எட்டையபுரத்தில் 11,டிசம்பர், 1882 ஆம் ஆண்டு சின்னசாமி, லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் முண்டாசு கவிஞர், சக்தி தாசன் , வீர கவி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவரது முரசு என்ற கவிதையில் உள்ள கருத்துக்களை இங்கு காணலாம்.
முரசு கொட்டி தெரிவிக்கும் கருத்துக்கள்:
இதில் பாரதியார் அவர்கள் குடும்பம், பெண் இனம், உலகில் மக்கள் யாவரும் ஒன்று போன்ற கருத்துக்களை கூறியுள்ளார்.
ஒரு குடும்பத்தில் பொருளைத் தேடி அதை தினமும் வளர்ப்பவன் தந்தை. மற்ற எல்லா செயல்களையும் செய்து இல்வாழ்க்கை சிறந்திட செய்பவள் அன்னை. தாய், தந்தை இடும் கட்டளைகளை ஏற்று அவற்றை சிறப்பாக செய்து முடிப்பவர்கள் குழந்தைகள். இந்த மூவரும் ஒருமித்து வாழ்வதே நல்லதொரு குடும்பம்.
பல சாதி பிரிவுகள் சொல்லி, உயர்வு, தாழ்வு என்று கூறி அதில் தினமும் சண்டைகள் செய்வர். சாதி சண்டைகள், சாதி கொடுமைகள் வேண்டாம். அன்புடன் அனைவரும் ஒற்றுமையுடன் செழித்து வாழ்வோம்.
உலகைப் படைத்த இறைவன் பெண்ணுக்கு இயற்கையாகவே அறிவை படைத்தான். அப்படி இருக்க சில அறிவிலிகள் பெண்களின் அறிவை கெடுத்தனர். ஆணும், பெண்ணும் இருக்கண்கள் போன்றவர்கள். இருக்கண்களில் ஒன்றை குத்தி ஒருகண் மட்டும் கொடுக்கும் பார்வை என்பது அழகாகது. பெண்களின் அறிவு வளர்ந்தால் இந்த உலகினுடைய அறியாமை விலகும்.
உலகில் தெய்வங்கள் பலவற்றை சொல்லி பகைமை தீயை வளர்ப்பவர்கள் மூடர்கள். அந்தணர் தீயை வணங்குவர். இஸ்லாமியர்கள் நித்தம் திசை நோக்கி வணங்குவர். கிறித்தவர்கள் சிலுவையை வணங்குவர். இந்த உலகில் பரம்பொருள் ஒன்றே. இதில் பற்பல சாதி சண்டைகள், மத சண்டைகள் வேண்டாம்.
ஒரு பூனை தான் பெற்ற குட்டிகளில் ஒன்று சாம்பல் நிறம், ஒன்று பாம்பு நிறம், மற்றொன்று கருஞ்சாந்து நிறம், அடுத்த ஒன்று வெள்ளை நிறம் போன்ற பல நிறங்கள் இருந்தாலும் அவை யாவும் பூனை என்ற ஒரே இனம் தான். அது போல இந்த உலகில் வாழும் மக்கள் நிறத்தால் வேறுபட்டாலும் அவர்கள் யாவரும் ஒன்றே. அவர்களின் எண்ணங்கள், செய்கைகள் எல்லாமே ஒன்று தான். இந்த மனப்பக்குவம் ஏற்பட்டால் இன்பங்கள் பெருகும். மக்கள் யாவரும் மற்றவர்களை உடன்பிறந்தவர்களைப் போல எண்ணி வாழ்ந்தால் நம்மிடம் சண்டை சச்சரவே இருக்காது.
உலகில் வாழும் மக்கள் எல்லாருக்கும் சோறு வேண்டும்.அதனால் தான் நம் உழுதுண்டு வாழ வேண்டும். வலியோர் மெலியோரை துன்புறுத்தக் கூடாது. ஒரு குழந்தை மெலிந்து இருக்கிறது என்பதற்காக அதை மிதித்து கொன்று விடுவது அழகாகுது. அறிவை வளர்க்க வேண்டும். சிறியரை மேம்பட செய்தால் தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும். சமத்துவம், சகோதரத்துவம் பாதுகாக்க வேண்டும்.
வாழும் மனிதர்களுக்கு எல்லாம் பயிற்று கல்வி பல தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்று என்று அன்பில் திளைக்கட்டும்.
முடிவுரை:
இவ்வாறாக பாரதியார் அவர்கள் முரசு கொட்டி உலக மக்களுக்கு அறிவுரைகளை வழங்குகிறார்.
PRAVESHIKA -தமிழ் பொழில்-1 -10.செல்வச் சிறுமியர் களிப்பு
PRAVESHIKA --தமிழ்ப் பொழில்-2--3.புலமைப் பெண்டிர்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikapulamaipendir.html
லேபிள்கள்: Praveshika-Tamil Pozhil-1


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு