VISHARAD POORVARDH--மலர்ச்செண்டு-- 1.திருக்குறள்
DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA
VISHARAD POORVARDH
மலர்ச்செண்டு
சங்ககாலக்கவிமலர்கள்
1.திருக்குறள்
சொல்வன்மை குறித்து திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:
முன்னுரை:
திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 குறள்களையும் கொண்டுள்ளது.திருக்குறள் பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து என்றும் அழைக்கப்படுகிறது.இது அறத்துப்பால் ,பொருட்பால்,காமத்துப்பால் எனும் மூன்று பிரிவுகளை கொண்டது.
அதில் சொல்வன்மை குறித்து திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை இங்கு காணலாம்.
சொல்வன்மை :
- நாம் நம் நாவினால் பேசி எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கும் திறமை வேறு எந்த சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.
- அவரவர் தாம் பேசும் சொற்களாலே நன்மையும், தீமையும் அமைவதால் பேசக்கூடிய நபர் தாம் பேசும் சொற்களில் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சொல்லும்போது கேட்பவர்களை தன வயப்படுத்தும் பண்புகளுடனும், கேட்காதவரும் கேட்கவிரும்புவதாக அமைவதே சொல்வன்மை ஆகும்.
- நாம் எந்த மனிதர்களிடம் பேசினாலும் அவர்களுடைய குடிப்பிறப்பு, வயது, செல்வம், ஒழுக்கம், தோற்றம் ஆகிய தகுதிகளை அறிந்து பேசவேண்டும். அதை தவிர உயர்ந்த அறமும், பொருளும் வேறு இல்லை.
- நாம் சொல்லும் சொல்லை வெல்ல வேறு சொல் இல்லை என்பதை அறிந்து அப்படிப்பட்ட சொல்லை சொல்ல வேண்டும்.
- பிறரிடம் பேசும் போது அவர்கள் திரும்பவும் நம் பேச்சை கேட்க விரும்புமாறு பேச வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது அவர்களுடைய சொற்களில் குற்றம் காணாமல் அதன் பொருளை மட்டும் பார்க்க வேண்டும். அதுவே மனக்குற்றம் அற்றவர்களின் கொள்கை ஆகும்.
- தான் எண்ணியதை பிறர் ஏற்று கொள்ளுமாறு சொல்லும் ஆற்றல் உள்ளவன் சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன். கேட்பவர் பகையாளன் என்றாலும் அஞ்சாதவன். இவனை பகை கொண்டு வெல்வது எவருக்கும் கடினமானது ஆகும்.
- ஒருவன் தான் சொல்லும் செய்தியை வரிசைப்பட கோர்த்து இனிமையாக சொல்லும் ஆற்றல் உடையவனாக இருந்தால், அவனுடைய சொற்களை இந்த உலகம் விரைந்து ஏற்கும்.
- குற்றமற்ற சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாத மனிதர்கள் பல பல சொற்களை பேசி கொண்டிருப்பர்.
- தான் கற்றதை பிறர் மனங்கொள்ள விளக்கி சொல்லும் ஆற்றல் இல்லாதவர், கொத்தாக மலர்ந்தும் மணம் இல்லாத மலர் போன்றவர்.
VISHARAD POORVARDH---மலர்ச்செண்டு---சிங்கன் சிங்கி உரையாடல்
https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhakutralakuravanjisingansingi.html
முடிவுரை:
இவ்வாறாக மனிதர்களின் சொல்வன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று இந்த அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
Visharad poorvardh-இலக்கிய கனிகள்-1. திருமந்திரம்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/visharad-poorvardh-1.html
VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html
லேபிள்கள்: Visharad Poorvardh-Malarcchendu


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
hai friends,
ALL THE BEST
Always keep learning
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு