வெள்ளி, 7 ஜனவரி, 2022

VISHARAD POORVARDH--மலர்ச்செண்டு-- 1.திருக்குறள்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

VISHARAD POORVARDH

மலர்ச்செண்டு 

சங்ககாலக்கவிமலர்கள்

1.திருக்குறள் 


 சொல்வன்மை குறித்து திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:


 முன்னுரை:


                     திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் முதற்பாவலர் செந்நாப்போதார்,தேவர்,  நாயனார் முதலிய பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.வள்ளுவன் தன்னை உலகுக்கு தந்த புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திருவள்ளுவரின் பெருமையை பாரதியார் எடுத்து கூறுகிறார்.

                         திருக்குறள் 133 அதிகாரங்களும்  1330 குறள்களையும் கொண்டுள்ளது.திருக்குறள் பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து என்றும் அழைக்கப்படுகிறது.இது அறத்துப்பால் ,பொருட்பால்,காமத்துப்பால் எனும் மூன்று பிரிவுகளை கொண்டது. 

             அதில் சொல்வன்மை குறித்து திருவள்ளுவர் கூறும் கருத்துக்களை இங்கு காணலாம்.


சொல்வன்மை :


  •                       நாம் நம் நாவினால் பேசி எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கும் திறமை வேறு எந்த சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.


  •                   அவரவர் தாம் பேசும் சொற்களாலே  நன்மையும், தீமையும் அமைவதால் பேசக்கூடிய நபர் தாம் பேசும் சொற்களில் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


  •                சொல்லும்போது கேட்பவர்களை தன வயப்படுத்தும் பண்புகளுடனும், கேட்காதவரும் கேட்கவிரும்புவதாக அமைவதே சொல்வன்மை ஆகும்.


  •                        நாம் எந்த மனிதர்களிடம் பேசினாலும் அவர்களுடைய குடிப்பிறப்பு, வயது, செல்வம், ஒழுக்கம், தோற்றம் ஆகிய தகுதிகளை அறிந்து பேசவேண்டும். அதை தவிர உயர்ந்த அறமும், பொருளும் வேறு இல்லை. 


  •                        நாம் சொல்லும் சொல்லை வெல்ல வேறு சொல் இல்லை என்பதை அறிந்து அப்படிப்பட்ட சொல்லை சொல்ல வேண்டும்.


  •                    பிறரிடம் பேசும் போது அவர்கள் திரும்பவும் நம் பேச்சை கேட்க விரும்புமாறு பேச வேண்டும். மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது அவர்களுடைய சொற்களில் குற்றம் காணாமல் அதன் பொருளை மட்டும் பார்க்க வேண்டும். அதுவே மனக்குற்றம் அற்றவர்களின் கொள்கை ஆகும்.


  •                    தான் எண்ணியதை பிறர் ஏற்று  கொள்ளுமாறு சொல்லும் ஆற்றல் உள்ளவன் சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன். கேட்பவர் பகையாளன் என்றாலும் அஞ்சாதவன். இவனை பகை கொண்டு வெல்வது எவருக்கும் கடினமானது ஆகும்.


  •                     ஒருவன் தான் சொல்லும் செய்தியை வரிசைப்பட கோர்த்து இனிமையாக சொல்லும் ஆற்றல் உடையவனாக இருந்தால், அவனுடைய சொற்களை இந்த உலகம் விரைந்து ஏற்கும்.

  •                குற்றமற்ற சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாத மனிதர்கள் பல பல சொற்களை பேசி கொண்டிருப்பர்.


  •               தான் கற்றதை பிறர் மனங்கொள்ள விளக்கி சொல்லும் ஆற்றல் இல்லாதவர், கொத்தாக மலர்ந்தும் மணம் இல்லாத மலர் போன்றவர்.

VISHARAD POORVARDH---மலர்ச்செண்டு---சிங்கன் சிங்கி  உரையாடல்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/visharadpoorvardhakutralakuravanjisingansingi.html

முடிவுரை:


            இவ்வாறாக மனிதர்களின் சொல்வன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று இந்த அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.  


Visharad poorvardh-இலக்கிய கனிகள்-1. திருமந்திரம்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/visharad-poorvardh-1.html


VISHARAD POORVARDH-மலர்ச்செண்டு-காளமேகக் கவிமலர்கள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/VISHARADPOORVARDHKALAMEGAKAVIMALARGALTAMIL.html









 










லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு