திங்கள், 24 ஜனவரி, 2022

PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --7.ஆழ்வார்கள் பன்னிருவர்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

தமிழ் இலக்கிய வரலாறு
 
7.ஆழ்வார்கள் பன்னிருவர்

ஆழ்வார்கள்:


                 வைணவ சமயத்தின் முதன்மை தெய்வமாகிய திருமாலைப்  பற்றி செய்யுட்களை இயற்றிவர்கள்  ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர் அவர்களைப் பற்றி இங்கு காணலாம்.


முதலாழ்வார் மூவர்:


                        ஆழ்வார்களுள் காலத்தால்   முற்பட்டவர்கள்   பொய்கையார் இயற்றியது முதல் திருவந்தாதி , பூதத்தாழ்வார் பாடியது இரண்டாம் திருவந்தாதி , பேயாழ்வார் பாடியது மூன்றாம் திருவந்தாதி என்னும் மூவர் ஆவர். 

                              இவர்கள் திருமாலைக் கண்டு அனுபவித்த ஆனந்தமே திருப்பாடல்களாக உருப்பெற்றது. 


திருமழிசையாழ்வார்:


                      திருமழிசை என்னும் தலத்தில் பிறந்தவர் திருமழிசையாழ்வார்.  திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன இவர் பாடியவை ஆகும்.

PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --10.உரையாசிரியர்கள் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/PRAVEEN%20POORVARDH%20--%20%20%20--10.%20.html

நம்மாழ்வார்:


                   "வேதம் தமிழ் செய்த மாறன்" எனப் போற்றப்படும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் தோன்றியவர் ஆவர். 

                          இவரால் பாடப்பட்டவை திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பனவாகும். 


மதுரகவியாழ்வார்:


                இவர் நம்மாழ்வாரையே தெய்வமெனக்  கொண்டு அவரையே பாடிப் பரவியவர் ஆவார்.         

                இவர் பாடியது 'கண்ணின்நுண் சிறுத்தாம்பு'  என்னும் நூலாகும்.


குலசேகராழ்வார்:


                     இவர் சேரமன்னராக இருந்தவர். இவர் அரச வாழ்க்கையை விட பெரிதும் ஈடுபட்டது  திருமாலின்  திருவடிகளே ஆகும். 

                  இவரது பாடல்கள்  "பெருமாள் திருமொழி " ஆகும்.


பெரியாழ்வார்:


                    திருமாலுக்கு பல்லாண்டு பாடிய இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றினார். பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துக்கு இவரது பாடல்களே மூல காரணம் என்பர். 


ஆண்டாள்:  


                   இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு திருமகள். சூடிக்  கொடுத்த நாச்சியார் என்னும் திருப்பெயர் கொண்டவர். 

                   இவர் பாடியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை. 

                   கண்ணனையே தன் கணவனாக கருதி வாழ்ந்தவர்.


தொண்டரடிப்பொடியாழ்வார்:


                   இவருடைய இயற்பெயர் விப்பிரநாராயணர். இவர் திருமண்டங்குடியைச் சேர்ந்தவர். 

                  இவர் பாடிய நூல்கள் திருமாலை , திருப்பள்ளியெழுச்சி ஆகியவை.


திருப்பாணாழ்வார்:


                     இவர் உறையூரில் பிறந்தவர்.  அமலனாதிப் பிரான்  என்னும் நூலைப் பாடியுள்ளார்.


திருமங்கையாழ்வார்:


                       திருக்குறையலூரில் பிறந்த இவருடைய இயற்பெயர் நீலன். பெரிய திருமொழி, சிறிய  திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்னும் நூல்கள் இவர் பாடியவை ஆகும்.


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/Praveenpoorvardhpanniruthirumuraigal.html


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhuraiyasiriyargal.html


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEENPOORVARDHTAMILILAKKIYAVARALARUSANGAKALAMORUPORKALAM.html


Praveen poorvardh--இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveenpoorvardhvalivadhaipadalamramanvaliyayaikollakaranam.html


 





லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு