புதன், 12 ஜனவரி, 2022

Praveen poorvardh--இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

வாலிவதைப் படலம் 

இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்களை தொகுத்து எழுதுக?


முன்னுரை:

 

                  இராமபிரான் அவர்கள்  அயோத்தியாவிலிருந்து வனவாசம் சென்றார். வனவாசத்தின் போது அவருக்கு கிட்கிந்தை மலையின் அரசனான சுக்ரீவன் உடன் நட்பு ஏற்பட்டது. அங்கு சுக்கிரீவனை கிட்கிந்தா மலையின் அரசன் ஆக்குவதற்காக அவனுடைய அண்ணண் வாலியை இராமபிரான் போரிட்டு அவனை கொன்றார். அவ்வாறு இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்களாக கூறிய கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.


இராமபிரான் வாலியை கொல்வதற்கான காரணங்கள் :



                      இராமபிரான் வாலியை  நோக்கி, நீ முன்னர் உன்னுடைய எதிரி மாயாவியைத் துரத்திக்கொண்டு சென்றாய். பின்னர் பல நாட்களாக திரும்பவில்லை. அதனால் உன்னை பின்தொடர முனைந்த சுக்கிரீவனை உங்கள் குலத்தலைவர்கள் அரசப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினர். அதற்கு சுக்கிரீவன் ஏன் அண்ணனை கொன்ற மாயாவியை கொன்று அழித்த பின் நானும் மாண்டு போவேன். அண்ணன் இல்லாமல் நான் அரசாள மாட்டேன் என கூறினான்.

               பிறகு அமைச்சர்களும், பெரியோர்களும் வற்புறுத்தி  அரசுரிமையை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிடவே குற்றமற்ற சுக்கிரீவன் ஆட்சியை ஏற்றான்.

          அதன் பிறகு மாயாவியை கொன்று நீ மீண்டும் வந்ததும் உன்னை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று என் தலைவனே! நமது வானர இனத்தவர்கள் வலியகொடுத்த அரசாட்சி உன்னுடையது என்று முன்பு நடந்த விஷயங்களை கூறினான்.

                    ஆனால்  நீயோ சுக்கிரீவன் சிறுதும் குற்றமற்றவன் என்பதை அறிந்தும் அவனிடம் இரக்கம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்தாய். என்னைத் துன்புறுத்ததே, என்  குற்றத்தை பொறுத்துக்கொள்  என்று சொல்லியும் அவன் மீது மிகுந்த கோவம் கொண்டு சீறினாய்.
 
                 மிக்க பலம் மிகுதியாக உடையவனாய் இருந்தும், பெரும் போரில் உனக்குத் தோற்றேன் என்று சொல்லியும் அவனைக் கொள்ள துணிந்தாய். அதனால் அவன் நான்கு திசைக்கு அப்பால் ஓடினான். சுக்கிரீவன் வலியிழந்து ஓடுகிறான் என்பதை அறிந்தும் அவன் உன்னுடைய தம்பி என்றும் கருதாமல் அவனிடம் இரக்கம் கொள்ளவில்லை. அவனை துரத்தினாய். அதனால் அவன் மதங்க முனிவரால் சாபம் இடப்பெற்ற தடை எல்லையை உடைய  இருசியமுகமலையில் போய்ச்சேர்ந்தான். அதனால் உன்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவனும் உயிர் பிழைத்தான். 

             பிறர் மனைவியின் கற்பு நிலையை பாதுகாக்கும் பெருமையே அன்பின் செயலாவதும், உயர் குடிப்பிறப்பின்  பயனாவதும்,வீரத்தின் பயனாவதும் ஆகும். பிறர் புக முடியாத காவலை உடைய பெண்களின் கற்பை அழித்தல் அறத்திலிருந்து தவறும் செயல் ஆகும். 

PRAVEEN POORVARDH-வாலி வதைப்படலம்-கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEEN%20POORVARDH-%20-%20%20%20.html

                 வாலி நீ அறத்தின் தன்மையை அறியாமல், இம்மை மறுமைப் பயன்களையும் ஆராய்ந்து அறியாமல் போனாய். அவற்றை ஆலோசித்து அறிந்து இருந்தால் நீ உன்னுடைய தம்பியின் மனைவியை அடைய நினைப்பாயோ?


              இப்படியெல்லாம் நீ செய்தாய். அதனாலும், அந்த சுக்கிரீவன் எனக்கு உயிர் நண்பன் ஆனதால் உன்னுயிரை பறித்தேன். எளியவர்களின் துன்பம் ஒழிப்பதே என் கருத்தாகும் என இராமபிரான் உரைத்தார்.


முடிவுரை:

       
                 இவ்வாறாக வாலியை கொல்வதற்கான காரணங்களை இராமர் கூறினார்.




praveen poorvardh kavidhai poonga




TAMIL ILAKKIYA VARALARU




























           

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

hai friends,
ALL THE BEST
Always keep learning

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு