வெள்ளி, 31 டிசம்பர், 2021

PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA

தமிழ் பொழில்-2

7.அமுத சுரபியும், ஆபுத்திரனும் 



முத சுரபி, ஆபுத்திரனும்  பற்றிய ஒரு கட்டுரை எழுதுக:


     

முன்னுரை:


                      ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இடம்பெற்ற அமுதசுரபியும், ஆபுத்திரனையும் பற்றி இங்கு காணலாம்.  முதலில் ஆபுத்திரன் கையிலும், பின்னர் மணிமேகலையின் கையிலும் இருந்த அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமே அமுதசுரபி. அதன் சிறப்பை பற்றி இங்கு விரிவாக காணலாம்.


வாரணாசி:


                 வாரணாசியில் அபஞ்சீகன் என்ற அந்தணனுடைய மனைவி சாலி என்பவள் தன பாவத்தை போக்கி கொள்ள குமரித்துறை வந்தாள். அங்கு அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை இரக்கம் இன்றி அங்கேயே விட்டு சென்றாள். அந்த குழந்தைக்கு அங்கு இருந்த ஒரு பசு பல் கொடுத்து ஏழு நாள்கள் பேணி பாதுகாத்தது. 


ஆபுத்திரன்:


                 அப்போது அந்த வழியாக இளம்பூதி என்பவன் தன் மனைவியுடன் அந்த வழியாக வந்தான். அப்போது அங்கு அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு பின்னர் மகப்பேறு இல்லாத காரணத்தால் அந்த குழந்தையை எடுத்து வளர்த்தான். பசுவினால் பாதுகாக்கப்பட்டதன் காரணத்தினால் ஆ-பசு, ஆபுத்திரன் என பெயர் சூட்டி அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வந்தான். ஆபுத்திரனும் 'இளமையில் கல்' என்ற சான்றோர் வாக்குப்படி  கலைகள் பல கற்று வாழ்ந்து வந்தான்.


அமுத சுரபியும், ஆபுத்திரனும்




பசுவினை காத்தல் :


                       அந்த ஊரில் அந்தணர்கள் செய்யும் யாகத்தில் பலி இடுவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவினை கண்டு மனம் வருந்தி அதனை அவிழ்த்து கொண்டு ஆபுத்திரன் ஊருக்கு தொலைவில் சென்றான். 

                   பலி இடும் சமயம் வந்ததும் பசுவை காணாததால் அதனை தேடிச்  சென்ற அந்தணர்  ஆபுத்திரனையும், பசுவையும் கண்டு கோபம் அடைந்தனர். அவர்கள் அவனை அடித்து துன்புறுத்தினர். அதனை கண்டா அந்த பசு ஒருவரை தனது கொம்பினால் குத்தி குடலை அறுத்து மாய்த்து ஓடி விட்டது. அவர்கள் ஆபுத்திரனனின் வார்த்தையை கேட்கவில்லை.

            பிறகு அவனை ஆதரித்து வளர்த்து வந்த பூதியும் அவனது மனைவியும் அவனை வீட்டை விட்டு துரத்தினர்.


PRAVESHIKA --தமிழ்ப்  பொழில்-2--3.புலமைப் பெண்டிர் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA%20--%20%20-2--3.%20%20.html

பிச்சை எடுத்து உண்ணுதல்:


              வீட்டை விட்டு வெளியே வந்தவன் மதுரை மாநகரில் பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தான். அங்கு அவன் தான் பிச்சை எடுத்து பெற்றதை தானே உண்ணாமல் முடவர், செவிடர், ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்தான்.


அமுதசுரபி: 

 

                  ஒருமுறை அந்த வழியாக வந்த ஒருவர் உறங்கி கொண்டிருந்த ஆபுத்திரனை எழுப்பி உணவு கேட்டான். இதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் சிந்தா தேவியை வணங்கி தொழுதான்.  அப்போது அவன் முன் தோன்றிய சிந்தா தேவி தெய்வம் அவனிடம் ஒரு பாத்திரத்தை கொடுத்து நாட்டில் மழை வளம், நீர் வளம் இல்லாத  சமயத்திலும்   இந்த பாத்திரத்தில் இடப்படும் உணவு ஒருநாளும் குறையாது என கூறி  கொடுத்து சென்றாள். 

               அந்த அட்சய பாத்திரமே அமுதசுரபி. ஆபுத்திரன் பசித்து வந்த விலங்குகள், மக்கள் என அனைவரின் பசியையும் போக்கினான்.


இந்திரனின் கோவம்:


                   ஆபுத்திரனின் இந்த அறச்செயல்களை கண்டு மகிழ்ந்து இந்திரன் முதியவர் வேடத்தில் தோன்றி "நீ வேண்டியவற்றை தருவதற்காகவே உன்னிடம் வந்துள்ளேன். வேண்டியதை கேள் என கூறினார். 

                ஆனால் ஆபுத்திரனோ "பசியால் வாடி வருவோரின் துன்பத்தை கலைவதே என் பணி"  உன் தேவலோகத்தில் தருமம் செய்வரோ, தவம் புரிபவர்களோ இல்லை என இகழ்ந்தான்.  இதனால் இந்திரன் கடும் சினம் கொண்டார்.  

                       இந்திரனின் செயலால் பாண்டி நாடு முழுவதும் மழை பொழிவினை வழங்கினான். நாடு வளம் நிறைந்ததாக ஆனது. இதனால் மக்கள் யாரும் ஆபுத்திரனின் கையை எதிர்பார்க்கவில்லை. 


சாவகத்தீவு:


                    இந்த நிலையில் மழைவளம் குன்றி மக்கள் பசியால் வாடி கொண்டிருந்த  மரக்கலம் ஏறி சாவகத்தீவுக்கு சென்றான். போகும் வழியில் இரவு நேரத்தில் மணிபல்லவதீவில் மரக்கலம் நின்ற போது ஆபுத்திரன் இறங்கியதை கவனியாதவர்கள் அவனை விட்டு விட்டு சென்று விட்டனர். 

                தீவில் தனித்து விடப்பட்ட அவன் தன்னை காத்துக்கொள்ள விரும்பவில்லை. இனி இந்த பாத்திரத்தால் பயன் இல்லை என கருதி அத்தீவில் இருந்த பொய்கையில் அதனை போட்டு "ஒவ்வொரு ஆண்டும் புத்தர் தோன்றிய வைகாசிப் பௌர்ணமி நாளில் வெளியில் தோன்றுக" எல்ல உயிர்களையும் தம்முயிர் போல எண்ணி வாழும் அருள் கொண்டவரின் கையில் சேர்க " என கூறி உண்ணாநோன்பு இருந்து உயிர் விட்டான்.  


மணிமேகலை:


                  காவிரிப்பட்டினத்தில் பிறந்த கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவளே மாதவி. மணிப்பல்லவத்தீவில் புத்த பீடிகையால் தன்  பிறப்பினை அறிந்தாள். அப்போது அவள் முன் தீவதிலகை என்பாள் தோன்றி அமுதசுரபியின் வரலாற்றைப்  பற்றி எடுத்துரைத்து நீ அங்கு சென்றால்  புத்தர் பிறந்த நன்னாளில் தோன்றும் அந்த பாத்திரத்தை நீ அடையலாம்.


அமுதசுரபியை பெறுதல்:


                         மணிமேகலை சாவகத்தீவு சென்று அந்த பொய்கையின் முன் நின்றாள். அங்கு அப்பாத்திரம் அவளை அடைந்தது. அதனை பெற்ற அவள் புத்தரை வணங்கி மகிழ்ந்தாள். 

                        அப்போது நீங்காத பசித்துன்பம் கொண்டிருந்த காயசண்டிகை என்பவள் மணிமேகலையிடம் வந்து "கற்புடையப்  பெண்டிருள் மிகவும் சிறந்தவள் ஆதிரை" அவள் கைகளால் உன் பாத்திரத்தில் உணவு ஏற்றால் அது மேலும் மேலும் பெருகும் என்றாள். 


ஆதிரையிடம் உணவு பெறுதல்:


                       மணிமேகலை ஆதிரையிடம் சென்று உணவு வேண்டினாள். இதனை அறிந்த ஆதிரை மணிமேகலையை வலம் வந்து வணங்கி அமுதசுரபி நிறையுமாறு சோற்றினை இட்டாள். பிறகு அது அறவழியில் தேடிய செல்வம் வளர்வது போல எடுக்க எடுக்க வளர்ந்தது. 

                      அப்போது அவளருகே இருந்த காயசண்டிகை மணிமேகலையிடம் இருந்து உணவு பெற்று  தன்  தீராத பசியை போக்கிக் கொண்டாள். பிறகு அவளுடைய பசி நோய் நீங்கியது. பிறகு மணிமேகலை மக்களின் பசி துயரை நீக்கி தன் பணியை தொடர்ந்தாள்.


முடிவுரை:


              இவ்வாறாக ஆபுத்திரன் மற்றும் அதன் பிறகு மணிமேகலையையும் வந்தடைந்த அமுதசுரபி உலகோர் பசிப்பிணியை போக்கியது. 


aadhirai


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikaaadhirai.html


Iniyavai natpadhu


https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKATAMILPOLILINIYAVAINARPADHU.html




 


 

 


   










லேபிள்கள்:

வியாழன், 30 டிசம்பர், 2021

PRAVESHIKA --தமிழ்ப் பொழில்-2--3.புலமைப் பெண்டிர்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA

தமிழ்ப்  பொழில்-2

3.புலமைப் பெண்டிர் 


புலமைப் பெண்டிர் பற்றி கட்டுரை எழுதுக:


முன்னுரை:


                  'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி  வளர்த்திடும் ஈசன்' என்பது கவிஞரின் வாக்கு. சங்ககாலத்தில் பெண்டிர் பலரும்  கல்வியறிவு பெற்று உயர்ந்த உண்மைகளைக் கொண்ட பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களுள் ஒரு சில பெண்பாற் புலவர்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.


ஒளவையார்:

 

                இங்கு நாம் கடையெழு வள்ளல்கள் வாழ்ந்த சங்ககாலத்தைய ஒளவையாரை பற்றி காணலாம். இவர் ஆதிச்சூடி உள்ளிட்ட பல நன்னூல்களை இயற்றியுள்ளார். அப்போது வாழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசர் அவர் முயன்று பெற்ற நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தார்.

                    அப்பழத்தை  உண்பதன் மூலம் நீண்டகாலம் உயிருடன் வாழமுடியும். அப்படிப்பட்ட பழத்தை ஒளவையாரின் மேல் கொண்டிருந்த அன்பின் காரணமாக வழங்கினார்.

                  அதியமான் ஒருமுறை ஒளவையாரை தொண்டைமான் என்ற மன்னன் இடத்தில் தூது அனுப்பினான்.   அங்கு ஒளவையாரை கண்ட அந்த அரசர் தன்னை அவர் புகழவேண்டும் என்பதற்காக தன்னுடைய  படைக்கலங்களை காண்பித்தார். ஒளவையார் அவரிடம் 'உனது படைக்கலங்கள் மாலை அணியப்பெற்று பளபளவென மின்னுகின்றன. 

                     ஆனால் எங்கள் மன்னனுடைய ஆயுதங்கள் பகைவருடன் போரிட்டு போரிட்டு நுனி மழுங்கி கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்ற என்று அதியமானின் வீரத்தை புகழ்ந்தார். அவன் பகைவர் அம்பு பட்டு இறந்ததை அறிந்த ஒளவையார் வருந்திப்படுவது கற்பவர் நெஞ்சைக் கரையச் செயயும். 

                   "ஈதல்  அறம், தீயவழிகளை  ஒதுக்கி நல்ல வழியில் ஈட்டுவதே பொருள்" , காதலித்த இருவர் ஒத்த கருத்துடன் வாழ்வதே இன்பம்"  பரம்பொருளை நினைத்து இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு" என அறம் , பொருள், இன்பம், வீடு நான்கிற்கு விளக்கம் தருகிறார்.


PRAVESHIKA-தமிழ் பொழில் -2.இனியவை நாற்பது 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA-%20%20-2.%20%20.html

காவற்பெண்டு:


                 புறநானூற்றில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்பாற்புலவர் காவற்பெண்டு அவரைப்பற்றி இங்கு காண்போம். 

                        தாய் ஒருத்தி தன்னுடைய மகனின் வீரத்தை எடுத்துக்கூறி பெருமிதம் கொள்கிறார் அதனை காவற்பெண்டு இவ்வாறு விளக்குகிறார்.   அழகிய வேலைப்பாடுகள் அமையப்பெற்ற தூண்களை உடைய  ஒரு சிறிய அழகிய வீடு.  

                    அந்த இல்லம் சிறந்த வீரனை பெற்றெடுத்த இல்லம். அங்கு ஒரு பெண் வருகிறாள். அங்கு உன் மகன் எங்கே?  என அந்த வீட்டு பெண்மணியிடம் கேட்கிறாள்.

                              அப்போது புலி தங்கிச்செல்லும் குகை போன்றது என் இல்லம். எனது வயிறும் புலி தங்கிச்சென்ற குகை போன்றது. "என்  மகன் வீட்டில் இருப்பான் அல்லது போர்க்களத்தே காணப்படுவான்" எனப் பெருமிதத்துடன் கூறுகிறாள். இத்தகைய பெண்டிர்  "மூதின் மகளிர்" என சிறப்பிக்கப் பெறுவார். 

                               இவ்வாறு மூதின் மகளிரின் வீரத்தை ஓர் இலக்கிய ஓவியமாக தன் பாடிய பாடல் ஒன்றில் அழகாக வர்ணித்துள்ளார்.


காரைக்காலம்மையார்
:


                         சோழ நாட்டில் தனதத்தன்  என்ற வணிகனுக்கு மகளாக பிறந்தவர் காரைக்காலம்மையார். இவரது இயற்பெயர் புனிதவதி. இவர் பேச தொடங்கிய நாள்  முதலே சிவபெருமானின் பெருமைகளை பேசி வந்தார். நாகபட்டினத்தை சேர்ந்த பரமதத்தன்  என்பவரோடு இமனைவியிடம் வருக்கு திருமணம் நிகழ்ந்தது. 

               ஒருமுறை  அவர் தன் மனைவியிடம் இரண்டு மாங்கனிகளை வழங்கினார். அவற்றுள்  ஒன்றை சிவனடியருக்கு வழங்கினார் காரைக்கால் அம்மையார். பிறகு கணவன் வந்ததும் அவருக்கு ஒரு மாங்கனியை வழங்கினார். அதை உண்ட கணவர்  இன்னொரு மாம்பழத்தையும் கேட்டார். உடனே அம்மையார்  இறைவனை துதிக்க அவர் கையில் அதிமதுரக்கனி வந்து சேர்ந்தது. 

                  அந்த கனியின் சுவை மிகுதியை உணர்ந்த கணவர் மனைவியிடம் கேட்க அவர் நடந்தவற்றை கூறினார்.  அவைகளை கேட்ட  பரமதத்தன் தன்  மனைவி மனிதபிறவி அல்ல தெய்வப்பிறவி எனக்கருதி அவரை விட்டு பிரிந்தார்.  அவர் அயல்நாடு சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்து குழந்தை பெற்று அதற்கு புனிதவதி என பெயர் சூட்டினார். 

                 கணவர் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்ற காரைக்காலம்மையாரை அவரது கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இவர் மனிதபிறவி அல்ல நற்பேரும்தேய்வம் என குறி அவரது காலில் விழுந்து வணங்கினான். 

                தன் கணவனின் சொல்லை கேட்ட அம்மையார் இறைவனை வேண்டி பேய் வடிவு பெற்று, கயிலை சென்று பரமனைக் காண விழைந்தாள். பிறகு இறைவனின் திருவடிகளை வணங்கி சிவபூஜை செய்து  " அற்புதத் திருவந்தாதி" எனும் நூலை பாடினார். 

                சிவ பெருமானின் பெருமைகளை விளக்கி  "திருஇரட்டை மணிமாலை " நூலினையும் பாடினார். 

              தலையினால்  நடந்து கயிலை சென்று அங்கு சிவனின் உருவத்தை மற்றும் அவரது திருநடனத்தை  கண்டு மகிழ்ந்தார் பிறகு மூத்த திருப்பதிகம் நூலை பாடி கடவுளை துதித்தார். 


ஆண்டாள்:


                 பாண்டி நாட்டில்  பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான விஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரின் திருமகளாக தோன்றியவர் ஆண்டாள்.

                    பெரியாழ்வார் அனுதினமும் இறைவனை தியானித்து, அவரது அருட்செயல்களையும், பெருமைகளையும் பாடுவதிலும், கடவுளுக்கு நந்தவனம் அமைத்து மலர் மலை கட்டி கடவுளுக்கு சூட்டி மகிழ்வார். 

                தம் தந்தையின் பாடல்களை கருத்தூன்றி படித்து பழகிய காரணத்தினால் கூதியின் உள்ளத்தில் கண்ணனே உருவமே பொலிவுடன் இருந்தது. அவர் கண்ணனையே திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினார். 

                  பெரியாழ்வார் நாளும் கடவுளுக்காக காட்டும் துளசி மாலையை தினமும் தான்  சூடிக்கொண்டு கண்ணாடி முன் நின்று கொண்டு அழகு பார்த்து வந்தார். இது அவரது தந்தைக்கு தெரியாது ஆகையால் அவரும் அந்த மாலையையே கடவுளுக்கு படைத்தார். 

                 பிறகு ஒருமுறை அவர் கோதையின் இந்த செயலை பார்த்து விட்டார். உடனே அவர் வேறு மாலையை கட்டி கடவுளுக்கு சூட முடிவு செயதார். ஆனால் கடவுள் அவருடைய கனவில் தோன்றி கோதை அணிந்த மாலையை தான் அணிந்து கொள்ள விரும்புவதாக கூறினார். பிறகு அந்த மாலையே பெருமானுக்கு படைக்கப்பட்டது. 

               அன்று முதல் "சூடிக்  கொடுத்த சுடர்க்கொடி" என அழைக்கப்பெற்றார். ஆண்டாள் பாடி அருளியவ்வை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பவை. கன்னிப்பெண்கள் நோற்கும் பாவை நோன்பினை விளக்குவதே திருப்பாவையாகும்.


முடிவுரை: 

 

                   இவ்வாறாக பல பெண்பாற்புலவர்கள் புலமை நலம் நிறைந்து  சங்ககாலத்தில் வாழ்ந்து உள்ளனர் என்பதை இந்த கட்டுரையின் மூலம் நம் அறிந்து கொள்ளலாம்.  


PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikanammakkalkavingargandhipadippinai.html


PRAVESHIKA--தமிழ் பொழில்-2--7.அமுத சுரபியும், ஆபுத்திரனும் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/praveshikaaamuthasurabiaaputhiran.html


லேபிள்கள்:

புதன், 29 டிசம்பர், 2021

VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

VISHARAD POORVARDH

இலக்கிய கனிகள் 

4.திலகவதியார் 


திலகவாதியாரின் திருத்தொண்டின் சிறப்பினை விளக்குக:


முன்னுரை:


திலகவதியார் :


              வளம் நிறைந்த திருமுனைப்பாடி என்னும் ஊரில் தந்தை பெரியார் புகழனார் தாய் மதினியார் என்பவருக்கும் செம்மலர்போல திலகவதியார் தோன்றினார். இவருடைய சகதோரர் மருணீக்கியார் எனும் இயற்பெயர் கொண்ட திருநாவுக்கரசர் ஆவார்.  


திருமண ஏற்பாடு:


                   திலகவாதியாருக்கு பன்னிரண்டு வயது ஆனது. இந்நிலையில் பேரழகு பெற்ற கலிப்பகையார் என்பார் திலகவாதியாரை மணம்  புரிய எண்ணி பெரியோர் சிலரை புகழனார் இடம் செலவிடுத்தார். அங்கு சென்ற பெரியோர்களின் வாயிலாக கலிப்பகையாரின் நல்ல பண்பும், அரசன் பால் அவன் கொண்ட அன்பு, அவருக்கு உற்றுழி உதவும் பண்பும் வாய்ந்தவர் என்பதை உணர்ந்த புகழனார் தன் மகள் திலகவாதியை அவர்க்கு அளிப்பதாக ஒப்பு கொண்டார். 


போருக்கு செல்லுதல்:


                              கலிப்பகையார் மிகவும் மகிழ்ச்சி உடன் திருமண ஏற்பாடுகளை செய்தார். அந்த சமயத்தில் வட நாட்டு  மன்னர் இவருடைய நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தினால் அரசன் கலிப்பகையாரை அழைத்து போருக்கு செல்லுமாறு பணித்தார். அரசனின் ஆணையை ஏற்று கலிப்பகையாரும் நெடுநாள் தங்கி கடும்போர் புரிந்தார்.

                      இந்த சமயத்தில் திலகவாதியாரின் தந்தையார் நோயினால் இறந்து விட்டார். கணவனின் பிரிவு துயர் தாங்காமல் மனைவியும் உயிர் துறந்தார். இந்நிலையில் போருக்கு சென்ற கலிப்பகையார் பகைவருடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார். 

VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்   5.மதுரை மாநகர் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/10/MADHURAI%20MANAGAR%20.html

சாகத்துணிதல்:


                        தாய், தந்தையரின் இறப்பின் துயர் தாளாது கடும் துயரில் இருந்த திலகவாதியாருக்கு இப்போது தமக்கென்று பேசப்பட்டவரும் இறந்து விட்டதை எண்ணி தானும் உயிர் விட எண்ணினார். 

                              இவ்வாறு தமக்கையார் உயிர் விட துணிந்ததை அறிந்த மருணீக்கியார் விரைந்து சென்று அவரது திருவடிகளில் விழுந்து "தாயும் தந்தையும் மறைந்த பின்னும், நான் உயிர் வாழ்வது உன்னை வணங்கத்தானே" நீயும் என்னை விட்டு போக துணிந்தால் உனக்கு முன் நான் உயிர் விடுவேன் என கூறினான். இதனை கேட்ட திலகவதியார், தம்பியின் நிலை கண்டு மனம் மாறி சாகும் எண்ணத்தை கைவிட்டார். தம்பிக்காக உயிர் வாழத் துணிந்தார். 


அறச்செயல்கள்:


                         திலகவாதியாரின் மனமாற்றத்தை அறிந்து மருணீக்கியார் மனவருத்தம் நீங்கப் பெற்றார். உலகின் நிலையாமையை நன்கு உணர்ந்து அறச்செயல்கள் செய்ய விழைந்தார். அறச்சாலைகளும், தண்ணீர் பந்தல்களும் அமைத்தார். வேண்டுவோருக்கு தேவையான உதவிகளை செய்தார். விருந்தினரைப் பேணியும், நாவலருக்கு வளம் பல நல்கியும் வாழ்ந்து வந்தார். இவ்வாறு பல  அறச்செயல்கள் பல புரிந்த அவர் தன் செல்வம் அனைத்தும் துறந்து கொல்ல நோன்பு கொண்ட சமணசமயமே சிறந்த சமயமென்று எண்ணி சமண சமயத்தை தழுவினார். 


திருப்பணிகள்:


                        திலகவாதியர் தவநெறி மேற்கொண்டு சிவபெருமானின் திருவருளைப் பெறுவதற்காக பெரிதும் விழைந்தார். திருவதிகை எனும் திருத்தலத்தை அடைந்தார் அங்கு சிவனை வணங்கியும், திருப்பணிகளை செய்தும் வாழ்ந்து வந்தார். இவ்வாறு திருத்தொண்டு புரியும் திலகவாதியாருக்கு தன் தம்பி பிற சமயத்தை தழுவி இருப்பதை எண்ணி வருந்தினார். என் தம்பியைப் பிற சமயத்தை விட்டு நீக்கி அவனை ஆட்கொள்வாயாக என மனம் உருகி வேண்டினார். 


சூலைநோய்:


                      மனம் இறங்கிய பெருமான் ஒருநாள் அவரது கனவில் தோன்றி, "சூலைநோய் கொடுத்து அவளை ஆட்கொள்வோம் என்று அருளினார்.  அவ்வாறே மருணீக்கியாருக்கு சூலை நோய் ஏற்பட்டது. தாம் கற்றுணர்ந்த சமண சமய மந்திரங்களை கொண்டு நோயை தடுக்க முனைந்தார். நோய் தணியவில்லை. மயிற்பீலி கொண்டு உடல் முழுவதும் தடவினார். அப்போதும் நோய் தணியவில்லை. நோயின் துன்பம் அதிகமாகவே அவருக்கு தன் தமக்கையின் நினைவு எழுந்தது. உடனே பணியாளை ஏவி தன் தமக்கையிடம் கூறிவருமாறு ஏவினார். அவனும் திலகவாதியாரிடம் சென்று நடந்தவற்றை எடுத்துக்கூறி உம் தம்பி உய்யும் வழியைக்  கேட்டு வருமாறு பணித்தார் என கூறினான். தன்னால் வர இயலாது என மறுத்து விட்டார். 


திலகவாதியாரின் திருவடிகள்:


                              தமக்கையின் மறுமொழி கேட்ட அவர் தனது சமண சமய கோலத்தை துறந்து திலகவாதியாரின் திருவடிகளில் விழுந்தார். என் துயர் களைந்து  அருள வேண்டும் என வேண்டினார் . உடனே திலகவாதியார்  திருவைந்தெழுத்தினை ஓதித் தீருநீறு கொடுத்தார். உடனே அவர் அந்த திருநீற்றை தன் திருமேனியில் பூசி கொண்டு திலகவாதியாரின் பின் சென்றார்.கோயிலுக்கு சென்ற மருணீக்கியார் தம் மாயை அகலுமாறு நிலத்தில் விழுந்து கும்பிட்டு திருப்பதிகம் படி அருளினார். அக்கணமே அவரது நோய் அகன்றது. 


திருநாவுக்கரசர்:


                          நாவுக்கர சென்று உலகேழினும் நின் நன்னமாம் நயப்புற மன்னுக எனும் வாக்கு வானில் எழுந்த அன்று முதல் தருமசேனர் திருநாவுக்கரசர் ஆனார். 


முடிவுரை:

      

                             திருநாவுக்கரசரை உலகிற்களித்து அழியாப்புகழ் பெற்றார் திலகவதியார். தம்மை நெறிப்படுத்திய திலகவாதியாரை "ஈன்றாளுமாய் எனக்கு " எந்தையுமாய் உடன் தோன்றினராய்" என்று திருநாவுக்கரசர் பாடி புகழ்ந்தார். 

                               








லேபிள்கள்:

செவ்வாய், 28 டிசம்பர், 2021

PRAVEEN POORVARDH--தமிழ் இலக்கிய வரலாறு --6.பன்னிரு திருமுறைகள்

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

தமிழ் இலக்கிய வரலாறு
 
6.பன்னிரு திருமுறைகள் 


முன்னுரை:


                     சைவ சமயத்தைச் சார்ந்த பன்னிரு திருமுறைகளுள்  ஒரு சில சங்கமருவிய காலத்தையும் ஒரு சில  சோழர்காலத்தையம் சார்ந்தது.இங்கு முறை என்பது நூல் என்று பொருள் படும். அவற்றை பற்றி இங்கு காணலாம்.


பன்னிரு திருமுறைகளின் வகைகள்: 


முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகள்:


                           இந்த மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடப்பட்டவையாகும். இவர் சீர்காழி எனும் ஊரில் பிறந்தவர்.  இவர் பாடியவற்றில் நமக்கு கிடைத்தவை 384 பதிகங்களாகும். இவரது பாடல்கள் இயற்கை நலம் வாய்ந்தவை. ஆளுடைய பிள்ளையார், காழியர்கோன்  எனவும் அழைக்கப்படுகிறார். 


நான்காம்,ஐந்தாம்,ஆறாம் திருமுறைகள்:


                        இந்த திருமுறைகளை இயற்றியவர் திருநாவுக்கரசர். இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழனார், மதினியார் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரது தமக்கையார் திலகவாதியார் ஆவர். அப்பர், வாகீசர் இவரது வேறு பெயர்கள் ஆகும். இவர் பாடியானவற்றில்  இன்று கிடைப்பன 311 பதிகங்கள்  ஆகும்.


ஏழாந் திருமுறை:


                         திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார், இசை ஞானியார் எனும் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் சுந்தரமூர்த்திகள் அவர்கள். நம்பியாரூரர், தம்பிரான்தோழர், வன்றொண்டர் எனும் பல பெயர்களை பெற்றுள்ளார். இவர் பாடியது ஏழாந் திருமுறை ஆகும். 

PRAVEEN POORVARDH --தமிழ் இலக்கிய வரலாறு --7.ஆழ்வார்கள் பன்னிருவர்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/PRAVEEN%20POORVARDH%20--%20%20%20--7.%20.html

எட்டாம் திருமுறை:


                    பாண்டி  நாட்டில் திருவாதவூர் எனும் திருத்தலத்தில் தோன்றியவர் மாணிக்கவாசகர். "தென்னவன் பிரமராயன்" என சிறப்பிக்க பெற்றவர். இவர் இயற்றியவையே எட்டாம் திருமுறை ஆகும்.  இவருடைய படைப்பான "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்"  என்னும் வழக்கு திருவாசகத்தின் பெருமையை விளக்கும். 


ஒன்பதாம் திருமுறை:


                      திருமாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், கண்டராதித்தர், காடவநம்பி உள்ளிட்ட ஒன்பது சான்றோர்களால் பாடிய திருவிசைப்பாக்கள் ஒன்பதாம் திருமுறை ஆகும்.


பத்தாந் திருமுறை:


                     திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாந் திருமுறை ஆகும். இந்நூல் ஒன்பது தந்திரங்களையும், 3047 பாடல்களையும்  கொண்டுள்ளது. சைவ சித்தாந்தத்தின் கொள்கைகளை உணர்த்தும் முதல் நூல் திருமந்திரம் என கூறுவர். 


பதினோராந் திருமுறை:

  

                  திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நம்பியாண்டார் நம்பி, நக்கீரர்  போன்ற பன்னிருவர்கள் பாடிய அருட்பாக்கள் பதினோராந்  திருமுறை ஆகும்.


பன்னிரெண்டாம் திருமுறை:


                     சிவனடியார்களின் வரலாற்றை இனிது விளக்கும்  'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் பாடப்பட்டதாகும். இவருடைய இயற்பெயர் அருள் மொழித்தேவர் ஆகும். நடராசப்பெருமானே  "உலகெலாம்" என அடி எடுத்துக் கொடுக்க இந்நூலை பாடினார். பல்வேறு காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் இந்நூலின் அடிப்படைக்கு கருத்து  "அன்பே சிவம்" என்பதாகும். 


முடிவுரை:


                  இவை அனைத்துமே பன்னிரு திருமுறைகளின் வகைகள் ஆகும்.


                        







 

லேபிள்கள்:

திங்கள், 27 டிசம்பர், 2021

PRAVESHIKA -தமிழ் பொழில்-1 -10.செல்வச் சிறுமியர் களிப்பு

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVESHIKA

தமிழ் பொழில்-1


10.செல்வச் சிறுமியர் களிப்பு 


கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை 


செல்வச் சிறுமியர் களிப்பைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை  எவ்வாறு வர்ணிக்கிறார்?


முன்னுரை:

 

                   'கவிமணி' என சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தால் பட்டம் பெற்ற தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட செல்வச்சிறுமியர் என்னும் கவிதை தொகுப்பின் கருத்துக்களை இங்கு காணலாம். குழந்தைப்  பாடல்களே இவரது சிறப்பினை வெளிப்படுத்துவனவாகும்.


ஆசிரியர் குறிப்பு:


                  நாஞ்சில் நாட்டை சேர்ந்த தேரூரில் சிவதாணுப்பிள்ளை , ஆதிலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 

          1940 ஆம் ஆண்டு கவிமணி என பட்டம் பெற்றவர்.


இயற்றிய நூல்கள்:


                     மலரும் மாலையும், மருமக்கள் வழி , மான்மியம், ஆசியஜோதி,  உமர்கயாம் பாடல்கள் முதிலியன இவரது படைப்புகள்  ஆகும். இறுதி இரண்டு நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகும்.        

              ''கவிமணியின் உரைமணிகள்" நூல் 1959 இல் வெளிவந்தது.  


செல்வச்சிறுமியரின் களிப்பு  :


                    செல்வச்சிறுமியர் தினம் தினம் நல்ல சுவையான உணவுகளையே உண்பர். நல்ல பழுத்த பழத்தையே உண்பர். பல வகையான பானகத்தை  அருந்தி மகிழ்வர். மணக்கும் சந்தனத்தை பூசி மகிழ்வர். 

                 காலத்திற்கேற்ப பிடித்த உடையை அணிந்து மகிழ்வர். தலைவாரி பூச்சூட்டி மகிழ்வர். தோழியரோடு கூடி விளையாடுவர். ஓடி ஒளிந்து விளையாடுவர். கண்பொத்தி விளையாடுவர்.    கைகொட்டி சிரிப்பார்.கும்மி அடிப்பார். 

                     ஊஞ்சல் ஆடுவர் , படுவர். சிறு மணல் வீடு கட்டி மகிழ்வர். சித்திரம் வரைவர். நாளும் பசும்பால் அருந்துவர். தமக்கு இணையானவர் யாரும் இன்றிச் செல்வச் சிறப்பாக வாழ்வர். 

                   இவ்வாறாக செல்வச்சிறுமிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.


PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikanammakkalkavingargandhipadippinai.html


ஏழைச் சிறுமியரின் மனப்புழக்கம் :

 

                    ஏழைச் சிறுமிகள் நல்ல உணவுகளை உண்டதில்லை. வயிறு நிறைய உண்பதில்லை. பசியால் அனுதினமும் வாடுவார்.   அன்னப்பால் எனப்படும் கஞ்சியைக் கூட அவர்கள் காணாதவர்கள். 

                        செல்வச்சிறுமிகள் இட்லி ஐந்தாறு தின்றோம் என்று கூறினால அவற்றை எலி என நினைத்துக்கொண்டு நாங்கள் பட்டினியாகக் இருந்து இறந்தாலும் அத்தகைய பாவத்தை செய்ய மாட்டோம் எனக் கூறுவர். அவர்கள் தேயிலை என்றால் அது தேக்கிலையா என கேட்பர். காப்பியை கண்ணால் கண்டதில்லை. 

                      ஆனைக்  கொம்பன் என்ற அரிசி சாதத்தை பற்றி செல்வசிறுமிகள் கூறினால் அதை நம்ப மாட்டோம் என கூறுவர். அவர்கள் சோப்பு என்று  கூறினால் அது என்ன சுட்டு தின்னும் கிழங்கா? என கேட்பர். அவர்களுடைய ஒருமுழக்  கந்தல் துணியில் கூட ஆயிரம் கிழிசல் இருக்கும். அழுக்கைப் போக்க நீரில் கசக்கினால் கூட அந்த துணி பஞ்சு பஞ்சாய் பறந்து விடும். 

                       அவர்களுடைய கூந்தல் ஈச்சஞ்செடி போலிருக்கும். தலையில் தினமும் ஈரும், பேனும்  இருக்கும். மாதத்தில் மூன்று மாதம் கூட எண்ணெய்  போடாதவர்கள். தம் உடலில் சொரியும், புண்ணும் தோன்றும் என்று கூறுவர். 


PRAVESHIKA  தமிழ்பொழில்-முத்தபள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் உரையாடல

https://todayisagooddayhindi.blogspot.com/2022/11/PRAVESHIKA%20%20-%20.html


                      அவற்றிற்கு போட மருந்து கூட இல்லை, நல்ல உறக்கம் இல்லை என்பர். தம் படும் துன்பத்தை யார் அறிவார்கள் என மனம் ஏங்குவர். இவ்வாறாக ஏழைச் சிறுமிகள் தங்களுடைய மனப்புழுக்கத்தை நினைத்து ஏங்குவர்.



முடிவுரை:


             இவ்வாறாக கவிஞர்  அவர்கள் செல்வச் சிறுமிகள் களிப்பு   மற்றும் ஏழை சிறுமிகளின் மனப்புழுக்கத்தின் வேறுபாட்டை  அவர்களுடைய கருத்துக்களாக இந்த கவிதையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.


PRAVESHIKA --தமிழ் பொழில்-1 --11.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikanammakkalkavingargandhipadippinai.html


      PRAVESHIKA---தமிழ் பொழில்-1---8.முரசு       https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/praveshikamurasubharathiyar.html




லேபிள்கள்:

வெள்ளி, 24 டிசம்பர், 2021

VISHARAD POORVARDH- இலக்கிய கனிகள் -3.இலக்கிய கரும்பு

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

VISHARAD POORVARDH

இலக்கிய கனிகள் 

3.இலக்கிய கரும்பு 


இலக்கிய கரும்பின் இனிமை பற்றி கட்டுரை எழுதுக:
(அ)
கரும்பு பற்றி இலக்கியங்கள் யாது கூறுகின்றன?


முன்னுரை:


             நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்து விட்டு போன மிக பெரிய கருவூலம் இலக்கியம். இலக்கியங்களில் பலதரப்பட்ட விஷயங்களை பற்றியும் பேசப்பட்டுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சியினது முன்னோர் கரும்பினை உலகிற்குக் கொணர்ந்து தந்ததாகப் புறநானூறு கூறுகின்றது. அவ்வாறு இலக்கியங்களில் கரும்பை பற்றி கூறப்பட்டுள்ள கருத்துக்களை இங்கு காணலாம்.


திருக்குறளில் கரும்பு:


                              கயவரின் இயல்பினை கட்ட திருவள்ளுவர் கரும்பினை உவமையாக கூறுகிறார். வறியவர்கள் தங்கள் குறையினை கூறி வரும் போது இனிது பேசி, தம்மால் பேசி இயன்ற உதவியினை செய்யவர். ஆனால், கீழானோர் யாது கூறியும் கேளாது வாளா இருப்பர். ஆலையிலிட்ட பிறகு கரும்பு இனிய சாற்றினைத் தருவது போல, நன்கு ஒறுக்கப்பட்ட பின்னரே கீழோர் பயன்படுவர். இந்த கருத்தை திருக்குறளில் 

                            "சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் 

                                    கொல்லப் பயன்படும் கீழ்"

விளக்குகிறது.


VISHARAD POORVARDH-இலக்கிய கனிகள்-4.திலகவதியார் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/vishardpoorvardhthilagavadhiyar.html

நாலடியார்:


                        நாலடியார் கரும்பினை உவமையாக கொண்டு நமக்கு பல உண்மைகளை உணர்த்துகிறது. அறிவுடைய சான்றோரது நட்பு கரும்பினை நுனியிலிருந்து உண்பதை போல வாழ்க்கைக்கு இனிமையானதாக இருக்கும்.ஏனெனில் சான்றோர் கூறும் நல்லுரை முதலில் கசந்து பின் நன்மை பயக்கும்.  ஆனால் தீயோர் நட்பு முதலில் இனித்து  பின் கசக்கும்.  இது கரும்பினை அடியிலிருந்து சுவைத்தலை போன்றதாகும். 


திருநாவுக்கரசர்:


                       "ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் காண்"  எனவும், "கரும்பினில் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே" எனவும் இறைவனை பாடி புகழ்கிறார்.   

           திருபுறம்பயத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் திருநாமம் "கரும்படுசொல்லம்மை"   என்பதாகும்.


மன்மதன்:


                   மன்மதன் "கரும்பு வில்லி" என இலக்கியங்களில் பேசப்படுகின்றன. கரும்பினை வில்லாகவும், மலர்களை அம்பாகவும் கொண்டு இவன் காதலரைப் படுத்தும் பாட்டினை காணலாம்.  கரும்பினை வில்லாகக்  கொண்ட மன்மதனுக்குத் தென்றலே தேராகும். மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்டுள்ளான். அம்மலர்கள் செய்யும் செயல்களை இந்த பாடலில் காணலாம்.


                   "நினைக்கும் அரவிந்தம் நீலபசலை மாம்பூ       

                      அனைத்துணர்வும் நீக்கும் அசோகு 

                   கொல்லும் மதன் அம்பின் குணம்"


கொங்குவேளிரின் பெருங்காதை :


                        கொங்குவேளிர் என்பர் தாம் பாடிய பெருங்காதை என்னும் நூலில் கள்ளின் வகைகள் பலவற்றைக்  கூறுகின்றார். காஞ்சித்தெளிவு, புதுமலர் வேரி , தெங்கின் ஊறல், கரும்பின் ஊறல் எனவும் ஒன்றினை காட்டுகிறார். இதில் கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்படும் கள் கரும்பின் ஊறல் எனப்படும்.


                    அழகிய சொக்கநாதர் எனும் புலவர் மயிலையும், கரும்பினையும் வைத்து இரட்டுற மொழிதலாக பாடல் பாடியுள்ளார். கரும்பின் உடலில் கணு உள்ளது. மயிலுக்கும் தோகையில் கண் உள்ளது. காற்று வீசுவதால் கரும்பு அசைந்தாடுகிறது. மயிலும் மலைக்கண்டு களிநடம் புரிகிறது. ஆகவே கரும்பும், மயிலும் ஒப்பாகும். 


                     திருமுனைப்பாடி  நாட்டுவளம்  பேசும் சேக்கிழார் பெருமான் ஆறுபோலப் பெருகிவரும் கரும்பின் சாறு மடையினை உடைப்பதாகவும், அவ்வெள்ளத்தைக் கரும்பின் கட்டியால் அடைப்பதாகவும் பேசுகின்றார்.


                சிலப்பதிகாரத்தில் புதுமணம் புரிந்து கொண்ட கோவலன், 

                                "மாசறு பொன்னே வலம்புரி முத்தே 

                                காசறு விரையே கரும்பே தேனே"

என்று கண்ணகியை பாராட்டும் திறத்தினை காணலாம்.


முடிவுரை:


                   இவ்வாறு கரும்பு தமிழ் இலக்கியங்களில் பலவாறு பேசப்படுதலை ஓரளவு இக்கட்டுரையின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். இவைகள் அந்த கரும்பினை சுவைப்பது போல இன்சுவை தரும்.

      

  


 




 










லேபிள்கள்:

வியாழன், 23 டிசம்பர், 2021

PRAVEEN POORVARDH-வாலி வதைப்படலம்-கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

வாலி வதைப்படலம்



1.இராமர், இலக்குவன், சுக்ரீவன் சென்ற கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகளை கூறுக :


இராமர், இலக்குவன், சுக்ரீவன் செல்லும் மலையின் சிறப்பு:


முன்னுரை:


        
                  இராமர் தன்னுடைய தந்தையின்  ஆணைக்கிணங்க தன் மனைவி சீதா, தம்பி இலக்குவன் உடன் அயோத்தியாவிலிருந்து வனவாசம் சென்றார். அங்கு  கிட்கிந்தை மலையின் அரசன் மற்றும் குரங்கின தலைவனான சுக்ரீவன் உடன்  இராமபிரானுக்கு  நட்பு ஏற்பட்டது. 
                    அங்கு சீதையை  இராவணன் கடத்தி சென்று விட்டான். அதனால் இராமர் மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்தார். அப்போது இராமர், இலக்குவன், சுக்ரீவன் மூவரும் இணைந்து கிட்கிந்தை மலைப் பகுதியில் நடந்து சென்றனர்.

                   அப்போது காணப்பட்ட கிட்கிந்தை மலையின் சிறப்புகளை இந்த கட்டுரையில்  காணலாம். 


மலை வளத்தின் சிறப்புகள்:



                        ஆண் யாளி ஒன்றும், புலிகள் இரண்டும், இரண்டு ஆண்  சிங்கங்களுடன், விரைந்து செல்லும் யானைகள் இரண்டும் கூடி செல்வது போல இராமர், இலக்குவன், சுக்ரீவன் , சுக்கிரவுனுடைய அமைச்சர்கள்  உடன் அந்த மலை வழியில் நடந்து சென்றனர். 
            அங்கு ஆச்சா மரங்களும், வாழைமரங்களும், பச்சிலை மரங்களும் இருந்தன. மரங்களின் தழைகள் காற்றில் அசைந்தாடப் பெற்ற சந்தன மரங்கள் மலர்ந்த மலைச்சாரல்களும், வாசனை வீசுகின்ற செண்பக மரச்சோலைகளும்  செழுமையோடு காணப்பட்டது.


                       இராமர் இலக்குவன் விரைந்து வருவதை கண்டு மேகங்கள் அஞ்சி சிதறி ஓடுகின்றன. அவற்றில் இருந்து நீர் பெருகி ஓடுகின்றன. 
                 மதங்கொண்ட யானைகள் தாக்கியமையால் முறிந்து விழுந்த அகில் மற்றும் சந்தன மரங்களும் உருண்டு வந்து சிதைந்து போனதால் அதில் இருந்த தேனடைகளில் உள்ள தேன் மலைவழிகளில் சிந்தி யாவும் செல்ல முடியாதபடி வழுக்கம் தன்மை உடையதாக மாறின.

                 

                 அந்த மலையில் பொருந்திய செம்மணிகள் நெருப்பை போல ஒளிவீசுகின்றன.    


                            அந்த மலை இடங்களில் எல்லாமே மிகவும் ஓங்கி இருப்பதால் அங்கு வானயாறு பாய்ந்தது. தினைத் தாள்கள் இருக்கும் இடத்தில காளைகள் பாய்வது போல அருவி பாய்கின்றன.

                                   அதன் முன்னிடங்களில் யானைகள் கூட்டமாக பாய்கின்றன. குருவிகள் திணைக் கதிர்களில் பாய்கின்றன . மந்திகள் மரக்கிளைகளில் பாய்ந்து ஓடியது.

PRAVEEN POORVARDH-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை-தேசிய கொடியின் சிறப்புகள்

https://todayisagooddayhindi.blogspot.com/2022/12/kavimanidhesigavinayagampillaidhesiyakodi.html 

 
                             அந்த மலைச்சாரல்களில்  ஏலக்காய்களின் நறுமணம் கமழுகின்றன. தேன் பெருகுதலால் வழுக்குகின்ற அந்த மலை சாரல்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும், வளைந்த அந்த பிறை நிலாவையும், அந்த வானத்து கிரகங்களையும், தன் பக்கம் ஈர்ப்பதோடு அல்லாமல்  அந்த இந்திரனையே தன்  பக்கம் ஈர்க்கும் தன்மை உடையதாக இருந்தது. 

PRAVEEN POORVARDH-வாலி வதைப்படலம்-கிட்கிந்தை மலை வழியின் சிறப்புகள்

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVEEN%20POORVARDH-%20-%20%20%20.html

முடிவுரை:



                இவ்வாறாக  இராமர், இலக்குவன்,  சுக்ரீவன் செல்லும் மலை வழிப்பாதை மிகவும் செழிப்பாகவும், வளம் நிறைந்ததாவும்  இருந்தது.   

                   
 



 
தமிழ் இலக்கிய வரலாறு - 5.இரட்டைக் காப்பியங்கள் 













 

                      

லேபிள்கள்:

புதன், 22 டிசம்பர், 2021

PRAVEEN POORVARDH - கவிதைப் பூங்கா -குற்றாலக் குறவஞ்சி

 DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

PRAVEEN POORVARDH

கவிதைப்  பூங்கா 

6.குற்றாலக்  குறவஞ்சி 


திரிகூடராசப்பக்கவிராயரின் குற்றாலக்  குறவஞ்சியின் கருத்துக்களை தொகுத்து எழுதுக:


முன்னுரை:


               குறம்  எனப்படுவதே குறவஞ்சி ஆகும். மலைவாழ் மக்கள் குறவர் எனவும், பெண்டிர் குறவஞ்சி எனவும் அழைக்கப்பெற்றனர்.  சிற்றிலக்கியங்கள் எனச் சிறப்பிக்கப்படுவன தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பிள்ளைத்தமிழ் கலம்பகம், பள்ளு, அந்தாதி, குறம்  முதலியன ஒரு சிலவாம் .


நூல் ஆசிரியர்:


                    திரிகூடராசப்பர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் எனும் ஊரில் பிறந்தார். ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.  செய்யுள் இயற்றும் திறன் கைவரப்  பெற்றவர். விரைந்து படும் ஆற்றல் பெற்றவர். திருக்குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடியுள்ளார்.

                    இவற்றுள் இசை விருந்தும் சொல் விருந்தும், பொருள் விருந்தும் தரவல்லது குற்றாலக் குறவஞ்சியாம்.


குற்றாலக்குறவஞ்சி:


விளக்கம்:


              *   ஆண்குரங்கு பெண்குரங்குக்கு பழம் கொடுத்துக் கொஞ்சி விளையாடும். அந்தப் பெண்குரங்கு அந்த பழத்தை வேண்டாம் என்று போட்டுவிடும். அப்படிப் போடும் பழங்களை எனக்குத் தரமாட்டாயா என்று வானுலகில் உள்ள கவிஞர்கள் வேண்டிக் கேட்பார்கள். 

                  காட்டு வேடர்கள் வானுலகத் தேவரைக் கண்ணால் ஏறெடுத்துப் பார்த்து  அழைப்பர். வானத்தில் உள்ள சித்தர்கள் இந்த மலைக்கு இறங்கிவந்து காயச்சித்தி மூலிகைகளை விளைவிப்பர். தேனருவி அலை மேலே எழும்பி வானத்திலிருந்து ஒழுகும்.

                 அதனால் சூரியன் தேர் பூட்டி குதிரைக் கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்.வளைந்துள்ள  பிறைநிலாவை  சூடியிருக்கும் குற்றாலநாதர் இருக்கும் மலை எங்கள் மலை.



             *  அருவி அலை முத்துகளைக் கழங்குகளாக எறிந்து விளையாடும். மேலும் அந்த அலை சிறுமியர் விளையாடும் மணல்வீடுகளை அடித்துச் செல்லும். நாங்கள் கிழங்குகளைத் தோண்டி எடுப்போம். காய்ந்த திணைகளை யானைத் தந்தங்களால்  இடிப்போம். குரங்கு மாம்பழங்களைப் பறித்துப் பந்து போல் விளையாடும். 

                   செண்பகப் பூக்களின் தேன் மணம் வானுலகில் வீசும். நாங்கள்  தேன் எடுப்போம் அதன் வளத்தைப் பாடிக்கொண்டே  நடிப்போம். கொடை வழங்கும் ஈசர் குறும்பலாவின் ஈசர் வளம்பெருகும் குற்றாலமலை எங்கள் மலை.



              *  பாம்பு ஈன்றும்  நாகமணி கோடி வெயில் போல வெளிச்சத்தை  தரும். இந்த மலையில் மேயும் யானை நிலாவைக் கவளம் என்று எடுக்க வழி மறிக்கும்.


PRAVEEN POORVARDH -கவிதை பூங்கா-2.சுற்றம் தாழல் 

https://todayisagooddayhindi.blogspot.com/2022/03/praveenpoorvardhsutramthalal.html


                  வேட்டுவர் தினை விளைவிக்கும் புனத்தில்  குங்குமம், சந்தனம் மணம்  மணக்கும். ஆடுகள் குதித்து விளையாடும்.காக்கை பறக்க முடியாத மலையில் மேகம் மேயும். ஈசர் பலா அடியில் தங்கும் குற்றால மலை எங்கள் மலை.



              *  கயிலை என்னும் வடக்கிலுள்ள மலைக்குத் தெற்கில் பொன்னாலான  மலை போல் உள்ள மலை எங்கள் மலை. 

              தெற்கில் உள்ள சயிலம் என்னும் மலைக்கு வடக்கில் உள்ள மலை எங்கள் மலை.வயிரம், மாணிக்கம் ஆகியவை  விளையும் எங்கள் மலையில் வானத்துச் சூரியன்  குகைகளில் நுழையும். 

               தூங்கும் பெருமால் தேடுகின்ற  திரிகூடர் வாழும் மலை எங்கள் மலை.



           * கொல்லிமலையின் உறவுக்கார மலை எங்கள் செல்லிமலை. விந்திய மலை எங்கள் தந்தை மலை.  என் அண்ணன் வாழும் மலை இமயமலை ஆகும்.பழனிமலை எங்கள் கொழுந்தன் வாழும் மலை . 

                சாமிமலை என் மாமியார் வாழும் மலை. நாஞ்சில் நாட்டு வேள்வி மலை என் தோழி வாழும் மலை. மேகக்  கூட்டங்கள்  முழங்க மயில் ஆடும் திரிகூடமலை எங்கள் மலை.


             *  நாங்கள் வேறொரு குலத்தவனுக்குப் பெண் கொடுக்க மாட்டோம். வேறு குலத்து பெண்ணை  மணந்துகொள்ள மாட்டோம். எப்போதுமே உறவின்  பிடியிலிருந்து விடுபடாத குறவர் குலத்தவர் நாங்கள். 

                 அனைவரும் அஞ்சும்படி, தினைப்புனத்தில் வந்த யானையை ஓட்டி, வேங்கை மரமாக இருந்து நிழல் தந்ததால் அந்த வேலவனுக்கு ஒரு பெண்ணைக்  கொடுத்தோம். எங்களிடம் உள்ள மலைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சீதனமாகக் கொடுத்தோம்.      

                  சூரியனும், நிலாவும் சூழும்  மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம். பரமர்  திரிகூடமலை எங்கள் மலை.


முடிவுரை:

                இவ்வாறாக குறவர் தங்கள் மலை வளத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறும் விதமாக இந்த குற்றாலக் குறவஞ்சி நூல் அமைந்துள்ளது. 



THIRUKKURAL






SILAPPADHIKARAM




TAMIL ILAKKIYA VARALARU





                  









லேபிள்கள்:

செவ்வாய், 21 டிசம்பர், 2021

VISHARAD POORVARDH -இலக்கிய கனிகள் -2.தம்பியர்

DAKSHIN BHARATH HINDI PRACHAR SABHA

VISHARAD POORVARDH

இலக்கிய கனிகள்
 
2.தம்பியர் 



ராமகாதை காட்டும் இலக்கிய தம்பியரின் சிறப்புகள்
(அ )


இலக்கியம் காட்டும் இன்பத்தம்பியரின் வரலாற்றை பற்றி கூறுக :


முன்னுரை:


            "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது சான்றோர் கண்ட நன்னெறியாகும். உடன்பிறப்பென்னும் பாசத்தையும், உடன்பிறவாதோரையும்  உடன்பிறந்தவர்களாகக்  கொண்டு வாழும் நெறியையும் இலக்கியங்கள் பல உணர்த்துகின்றன. அவ்வாறு ராமகாதை காட்டும் தம்பியர்கள் ஒரு சிலரை பற்றி இங்கே காணலாம்.


இலக்குவன்:


                இலக்குவன் அண்ணன் ராமன் மேல் பெரும் பற்றுடையவன் ஆவான். ராமனுக்கு துன்பம் நேரும் போதேல்லாம் சினங்கொண்டு எழுகிறான். அதேபோல கைகேயின் காரணத்தால் ராமன் காடு செல்ல நேர்ந்த போது கைகேயின் எண்ணத்தை நிறைவேற விடமாட்டேன் என வெகுண்டு எழுந்தான். அப்போது ராமன் லட்சுமணன் இடம் தான் அரசு துறந்தது விதியின் பிழையாகும் என லட்சுமணனின் கோவத்தை தணித்தான். 

             பிறகு அண்ணன் ராமர் கானகம் சென்ற போது அரச வாழ்க்கையை துறந்து அண்ணனோடு தானும் சென்றான். 

              ராமனை காண பரதன் காட்டிற்கு பெரும் படையுடன் வருவதை கண்ட இலக்குவன் அவனை தவறாக புரிந்து கொண்டு அவனை கொன்று அழிப்பதாக கூறுகிறான். இப்போது ராமன் பரதனுடைய பெருமைகளை எடுத்துக்  கூறி இலக்குவனின் சினத்தை தணிக்கிறான். 

             இவ்வாறு இலக்குவன் செய்யவதெல்லாம் ராமன் பால் கொண்ட அன்பின் காரணமாகத்தான் என்பதை நம்மால் உணர முடிகிறது.


இலக்குவன் மேல் ராமனின் அன்பு:


                         தன்னுயிரை புகழுக்கு விற்ற சடாயுவுக்கு இறுதிக்கடனை முடித்து விட்டு ராவணனை நோக்கி செல்லும் வழியில் ராமரின் தாகம் தணிப்பதற்காக நீர் கொண்டு வர சென்ற லட்சுமணனை அயோமுகி என்ற அரக்கி தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி பலவாறு வேண்டிக்கொண்டாள். லட்சுமணன்  அதனை ஏற்று கொள்ளாததால் லட்சுமணனை தூக்கி சென்று விட்டாள். 

                         நெடுநேரமாகியும் இலக்குவன் வராததால் பலவாறு வருந்தினார். தாய், தந்தையரை, சீதையையும் பிரிந்து வாழும் நன் எவ்வாறு உயிரோடு இருப்பேன் என்று 

                       "அறப்பால்  உளதேல் அவன்முன் னவனாய்ப் 

                           பிறப்பா லுறின் வந்து பிறக்க"

என்று உரைத்து இறக்க துணிந்தான்.  பிறகு அரக்கி எழுப்பிய ஒலியை  கேட்டு தம்பியின் இருப்பிடம் அறிந்து மிகவும் மகிழ்ந்தார்.   

              இந்திரஜித் ஏவிய நாகபாசனத்தினால் இலக்குவன் அழிந்தால், தானும் உயிர் துறப்பதாக ராமன் கூறும் சொற்களின் மூலம் அவனது அன்பின் ஆழத்தை காட்டுகிறது.

VISHARAD POORVARDH- இலக்கிய கனிகள் -3.இலக்கிய கரும்பு 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/visharadpoorvardhillakkiyakanigalillakkiyakarumbu.html

பரதனின் பண்பு:


                        குகனால் பெரிதும் போற்றப்படும் பரதனை பற்றி ராமகாதை கூறுவதை காணலாம். தயரதன் இறந்து விட்டதை அறிந்து பரதன் பலவாறு புலம்பி, ராமனைக்  கண்டு வணங்கினால் தான் தன் துன்பம் தீரும் என்று கூறி அவனை காண வந்தான்.

             வசிட்டமுனிவர் பரதனை அரசபாரம் ஏற்குமாறு வேண்ட, அதனை மறுத்து கூறும் பரதனது மொழிகளை கேட்டு அவையில் சான்றோர்கள் அவனைப் பெரிதும் பாராட்டினார்.

               ராமன் காட்டிற்கு சென்றதும் அரியணையில் அமராமல் ராமரின் பாதணிகளை அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டு வந்தான். பரதனின் பண்பு ஆயிரம் ராமருக்கு ஈடாகாது. 

             தந்தையிருக்க எனக்கு அரசுரிமை ஏன்?  மன்னவன் கட்டளையென்று அரசாட்சியை ஏற்று கொண்ட ராமனைக்  காட்டிலும் பரதன் உயர்ந்தவன் என்று அவையோர் கூறுதலும், 

"தாயாரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் 

தீவினை என்ன நீத்துச் சிந்தனை          என்று குகனும் ,


"எனைத்துள மறையவை இயம்பற் பாலன 

பனைத்திரன் கரக்கரிப் பரதன் செயகையை "

என ராமரும் பரதனைக்   புகழ்ந்து கூறுவதை காணலாம்.


கங்கை வேடன்-குகன்:


               காட்டில் வாழும் வேடன் குகன், ராமனிடத்துக் கொண்டுள்ள அன்பினை, படையுடன் வந்த பரதனைக்  கண்டு அவன் வெகுண்டு கூறும் சொற்களின் மூலம் உணரலாம். ஆயிரம் எலிகள் ஒன்று கூடினால் என்ன பயன்? ஒரு பாம்புக்கு அது ஈடாகுமா? அந்த பாம்பு சீண்டினால் போதும். அத்தனை  எலிகளும்  என கூறுகிறான். இங்கே பரதனின் படைகளை எலிகள் எனவும், ராமரை அரவம் எனவும் கூறுகின்றான்  குகன். 

            பிறகு பரதனின் பெருமையயை அறிந்த பின் மனம் மாறுகிறான். இவ்வாறு அவன் செய்வதெல்லாம் ராமன் மேல் கொண்ட பேரன்பின் காரணத்தினால் தான் என்பதை அறியலாம்.


கும்பகர்ணன்:


                இராவனது தம்பியருள் கும்பகர்ணனை  பற்றி பார்க்கலாம். "தோளோடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால்" என ராமனால் வியந்து கூறப்படும் அளவுக்கு பெருமை உடையவன் கும்பகர்ணன். இவன் வீடணன் போல இராவணனை வெறுத்து ராமனோடு நட்பு கொள்ளவில்லை. கர்ணனை போல செஞ்சோற்று கடன் கழித்தலே தனக்கு புகழ் என இராவணனோடு  இருந்தான். 

                      தனது பார்வையிலே கொல்லும் இயல்பு கொண்டது பாம்பு. அதுபோல தன் பார்வையாலே அரக்கர் குலத்தை கொல்லும்  கற்பு நிறைந்தவள் சீதை. அவளை ராமனிடம் கொண்டு விட்டு, அவனது திருவடிகளை வணங்குவதே நல்லது என தன் அண்ணனுக்கு எடுத்து கூறுகிறார் கும்பகர்ணன்.  

                       பிறகு தன் அண்ணனின் ஆணையை ஏற்று போருக்கு சென்று உயிர் துறந்து புகழ் கொள்கிறான்.


இலக்கியம் கூறும் தம்பியர்:


                  ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகம் ஆளுமாறு சிவனால் வரம் தரப்பெற்றவன் சூரபதுமன். இவன் தனது தம்பி சிங்கமுகனை அழைத்து ஆறுமுகனுடன் போரிடுமாறு கூறுகிறான். இவனும் முதலில் கும்பகர்ணன் போல தன் அண்ணனுக்கு அறிவுரை வழங்குகிறான். "வலிமை நிறைந்த உன் மைந்தரையும், அமைச்சரையும் இழந்து நிற்கும் உன் எண்ணம் மிகவும் இழிவானது ஆகும். 

              இறுதியில் 'ஊழின் வல்லமையை வென்றவர் யார்? எனக் கூறியவன்  போர்க்களம் சென்று புகழ் பெறுகிறான். 


ராமாயணம் குறிப்பிடும் இருதம்பியர் :


                    குரங்கின தலைவனாம் சுக்கிரவனையும், அரக்கர்குல தலைவனாம் வீபீஷணனையும் தம்பியாக ஏற்று வாழ்ந்தார் ராமர்.


முடிவுரை:


                  இவ்வாறாக தம்பியர்களின் அன்பு , சகோதரத்துவம், கடமை உணர்வு, சகோதரநயம், ஒற்றுமை, அன்பின் வெளிப்பாடு போன்றவற்றை காட்டுகிறது.

 

  














லேபிள்கள்:

சனி, 18 டிசம்பர், 2021

PRAVESHIKA-தமிழ் பொழில் -2.இனியவை நாற்பது

 DAKSHIN BHARATH  HINDI PRACHAR SABHA

PRAVESHIKA

தமிழ் பொழில் -2

2.இனியவை நாற்பது 



இனியவை நாற்பது கூறும் கருத்துக்களை தொகுத்து எழுதுக:



முன்னுரை:


                   பதினொண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டில் "நானாற்பது" என்று கூறப்படுவன கார்நாற்பது,  களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கும் ஆகும். இந்த கட்டுரையில் நாம் இனியவை நாற்பது பற்றி பார்க்கலாம்.


இனியவை நாற்பது:


                       நாம்  இனிது வாழ நம் முன்னோர்கள் பல நல்ல செயதிகளை பாடல்களாக தொகுத்து உள்ளனர். அவர்கள் நாம் கொள்ள வேண்டியவை இவை, தள்ள வேண்டியவை இவை என தொகுத்து கூறியுள்ளனர். அவ்வாறு நாம் கொள்ள  வேண்டுவனவற்றைக்  கூறும் நூல்களுள் ஒன்று தான் "இனியவை நாற்பது"  கடவுள் வாழ்த்தையும் சேர்த்து இந்நூல் 41 பாடல்களையும் கொண்டுள்ளது.


நூல் ஆசிரியர்:


               மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்பவர் இந்நூலின் ஆசிரியர் ஆவார். இவருடைய காலம் கி .பி இரண்டாம் நூற்றாண்டு. இவர் வேத சமயத்தை சார்ந்தவர் எனவும் கூறுவர்.


இந்நூல் கூறும் ஒரு சில உண்மைகளை இங்கே காணலாம்.


PRAVESHIKA-தமிழ்ப் பொழில் -2-  1.உத்தம நண்பர்
https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKATAMILPOZHILUTTHAMANANBAR.html

மழலைச் சொல் கேட்டல்:


                "குழவி தளர்நடை காண்டல் இனிது
                        
                 அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிது.


இங்கு குழந்தையின் நடையைப் பற்றி கூறுகையில்  "குழவி தளர் நடை இனிது"   என்றும்,  அக்குழந்தையின் மழலை சொற்களைக் கேட்டல் அமிழ்தத்தைக் காட்டிலும் இனிது என்று கூறுகிறார்.

2.மானம் இழந்த பின் வாழாமை:


                        மானம் என்பதன் பொருள் தன் நிலையில் தாழாமையும், தாழ்வு வந்தபொழுது உயிர் வாழாமையும் ஆகும்.ஒரு செயல் எத்துனை இன்றியமையாததாக இருப்பினும், அச்செயலைச் செய்வதால் மானத்தை இழக்கும் நிலை ஏற்படுமாயின் அதனை செய்யாமல் மானத்தை காத்தல் வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக சேரமன்னன் ஒருவனது வரலாற்றை காணலாம்.

                           சோழன் கோச்செங்கணான் என்பவருக்கும்  சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே போர் மூண்டது. இரு பெரும் படையினருக்கும் இடையே காண்பவர் நெஞ்சு நடுங்கும் வகையில் போரிட்டன. நெடுநேரம் நடந்த போரில் சேரர் படை தோல்வியை தழுவியது. சோழன் செங்கணான் சேரமன்னனை குடவாயில் கோட்டத்தில் சிறை வைத்தான்.

                தனக்கு மட்டும் இல்லாமல் சேரகுடிக்கே ஏற்பட்ட பழியினை நினைத்து அவன் மனம் கலங்கினான். அவன் தண்ணீர் வேட்கை காரணமாக கேட்ட நீரை காலம் தாழ்த்தி அவமதிப்போடு கொடுக்கப்பட்ட காரணத்தினால் அதை வாங்கி உண்ணாது உயிர் துறந்தான் சேரமன்னன்.  

                            மானம் காத்து உயிர் துறந்த சேரமன்னனின் செயல் இரும்பொறை மரபினருக்கே பெருமை அளிக்கும் ஒன்று ஆகும். சேரனின் இச்செயல் மானவீரம் என போற்றப்படும்.  


3.ஏவது மாறா இளங்கிளமை முன் இனிது:


                              தாய் தந்தை இடும் கட்டளையை மறுக்காது இன்முகத்துடன் செய்து உதவும் மக்களைப் பெற்றிருத்தல் இனிதாகும்.

           ஒருமுறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளை காண அவர் இல்லத்திற்கு சென்றார். அவரை நன்கு உபசரித்து ஆசனத்தில் அமரவைத்து பூசனைகள் செய்தார். 

                         

               அவருக்கு உணவு அளித்து உபசரிப்பதற்காக தன் மூத்த மகனான 

திருநாவுக்கரசரை வாழை  இலை அரிந்து வர அனுப்பினார்.


            அம்மைந்தனும்  

      நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப்பெற்றேன் என உள்ளம் நிறைந்த மகிழ்வோடு விரைந்து கொல்லையில் வாழை இலையினை அரியும் பொது அவன் கையில் பாம்பு தீண்டியது. அவ்வாறு பாம்பு தீண்டிய வேகத்தால் நான் கீழே விழுந்து இறப்பதற்கு முன்பு இலையை சென்று கொடுப்பேன். என்று கூறிக்கொண்டு விரைந்து இல்லத்திற்கு சென்று வலை இலையை கொடுத்த மாத்திரத்தில் உயிர் இழந்தான்.

             அப்போது உண்மையை உணர்ந்த திருநாவுக்கரசர்  "ஒன்றுகொலம்" என தொடங்கும் திருப்பதிகம் பட இறை அருளால் திருநாவுக்கரசு உயிர்  பெற்றான்.


4.நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே :


                             ஒருவர் செய்த நன்றியினை எந்நாளும் மறத்தல் கூடாது என உலகப் பொதுமறை திருக்குறள் எடுத்தியம்பும்.  அடுத்தவர் செய்த உதவியை நினைந்து வாழ்தல் இனிதாகும் என்று கூற வரும் இனியவை நாற்பது. நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே என கூறுகின்றது.

  நன்றி மறவா சிறப்பினைப் பாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக அறியலாம். 

             கர்ணன் தன் மகனே  என்பதை அறிந்து கொண்ட தாய் குந்தி தேவி கர்ணனை நோக்கி நீ உனது தம்பியர் பாண்டவர்கள் ஓடு சேர்ந்து இனிது வாழலாம் என்று கூறினார். நீ அவர்கள் துணை கொண்டு நாட்டை சிறப்பாக ஆளலாம். என கூறினார். 

               ஆனால்  கர்ணன் தன் தாயிடம் தன்னை ஆதரித்து தன்னோடு உணவு உண்ட தன்னை அங்கதநாட்டிற்கு அரசனாக்கிய துரியோதனனை விட்டு பிரிந்து வருவது என்பது இயலாத ஒன்று  என கூறுகிறான்.   

                துரியோதனனுக்காக போர்க்களத்திற்கு சென்று என்  உயிரைக் கொடுத்துச் செஞ்சொற்றுக்கடன் கழித்தலே எனக்கு புகழும், கருமமும், தருமமும் ஆகும் என்றான். இதன் மூலம் நாம் நன்றி மறவா பண்பினை உணரலாம். 


முடிவுரை:

              இவ்வாறாக நீதியும், நேர்மையும் நாட்டில் நிலவ, மக்கள் தங்கள் வாழ்க்கையில்  கொள்ளவேண்டிய  பல அரிய நல்லவைகளை இனியவை நாற்பது நூல்  எடுத்துக்கூறுகின்றது. இவைகளை கடைபிடித்து நாம் வாழ்வில் இன்புற்று வாழ்வோமாக..

 

PRAVESHIKA-TAMIL POZHIL-1-Kadavul Valthu

https://todayisagooddayhindi.blogspot.com/2021/11/praveshika-tamil-pozhil.html


PRAVESHIKA --தமிழ்ப்  பொழில்-2--3.புலமைப் பெண்டிர் 

https://todayisagooddayhindi.blogspot.com/2021/12/PRAVESHIKA%20--%20%20-2--3.%20%20.html



லேபிள்கள்:

வெள்ளி, 17 டிசம்பர், 2021

PARICHAYA -LESSON-5-का-के-की - உடைய


PARICHAYA

LESSON-5


ड़ा-बड़े-बड़ी -பெரிய  

 

छोटा-छोटे-छोटी-சிறிய 


यह गोपाल है | 

இவன் கோபால் .

यह रमेश है |

இவன் ரமேஷ் .

गोपाल रमेश का भाई है |

கோபால் ரமேஷ் உடைய சகோதரன். 

गोपाल रमेश का छोटा भाई है | 

கோபால் ரமேஷின் உடைய தம்பி.

गोपाल  का बड़ा  भाई कौन है ?

கோபால் உடைய அண்ணன் யார்?

गोपाल  का बड़ा  भाई रमेश  है | 

கோபாலின் உடைய அண்ணன் ரமேஷ் .


यह विमला है |

இவள் விமலா. 

विमला गोपाल की बहन है |

விமலா கோபாலின் உடைய சகோதரி. 

विमला गोपाल की छोटी बहन है | 

விமலா கோபாலின் உடைய தங்கை.

विमला की बड़ी बहन कौन है ?

விமலாவின் உடைய அக்கா யார்?

विमला की बड़ी बहन रोगिनी है | 

விமலாவின் உடைய அக்கா ரோகிணி 


prathmic lesson का-के-की - உடைய  



गोपाल के पिताजी का नाम क्या है ?

கோபாலின் உடைய அப்பாவின் பெயர் என்ன?

गोपाल के पिताजी का नाम मणिलाल है | 

கோபாலின் உடைய அப்பாவின் பெயர் மணிலால்.

गोपाल की माताजी का नाम क्या है ?

கோபாலின் உடைய அம்மாவின் பெயர் என்ன?

गोपाल की माताजी का नाम गायत्री है | 

கோபாலின்  உடைய அம்மாவின் பெயர் காயத்ரி .

ये कौन हैं? ये गोपाल के अध्यापक हैं | 

இவர் யார் ? இவர் கோபாலின் உடைய ஆசிரியர்.

यह कौन हैं ? यह लीला है | 

இவள் யார்? இவள் லீலா.

लीला विमला की सहेली है | 

லீலா விமலாவின் உடைய தோழி.

यह कौन है? यह गोपाल का दोस्त है | 

இவன் யார்? இவன் கோபாலின் உடைய நண்பன்.


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/parichayahindilessontamil.html


https://todayisagooddayhindi.blogspot.com/2022/01/Parichayalessontamil.html

यह तोता  है | तोते की चोंच लाल होती है | 

இது கிளி. கிளியின்  அலகு சிவப்பாக இருக்கிறது.

तोते का शरीर हरा होता है | 

கிளியின்  உடல் பச்சையாக இருக்கிறது.

यह बंदर है | बंदर की पूँछ लम्बी होती है | 

இது குரங்கு. குரங்கின் வால் நீளமானதாக இருக்கிறது.

animals name



बंदर की पूँछ कैसी है ?

குரங்கின்  வால் எப்படி இருக்கிறது?

बंदर की पूँछ लम्बी होती है | 

குரங்கின்  வால் நீளமானதாக இருக்கிறது.

यह गाय है |  गाय  का दूध मीठा होता  है | 

இது பசு. பசுவின் பால் இனிப்பாக இருக்கிறது.

गाय  का दूध कैसा है?

பசுவின் பால் எப்படி இருக்கிறது?

गाय  का दूध मीठा और पतला होता  है | 

 

 

லேபிள்கள்: